புதன்கிழமை, 27 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும். நீதிமொழிகள் 10:21 * வார்த்தைகளால் உறவுகளை வலுப்படுத்தவும், நலிவுறவும் செய்யக்கூடும் என்பதால் மக்களின் வாழ்க்கையில் வார்த்தைகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.* உங்கள் வார்த்தைகளைக் கொண்டு பிறர் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை சற்று சிந்தியுங்கள்.* நீங்கள் அன்பும் உற்சாகமுமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்களா? அல்லது, புண்படுத்தும் எதிர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்களா?* இதைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். ஏனென்றால் உங்கள் வார்த்தைகள் மற்றவர்களின் உணர்ச்சிகளையும், மேலும் அவர்களின் நாள் முழுவதையும் கூட பாதிக்கும் சக்தியைக் கொண்டுள்ளன. உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஊக்கம் தேவை. ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தவும், ஒருவரையொருவர் கட்டியெழுப்பவும் நாம் முயல வேண்டும். இதன்மூலம், வளர்ச்சியையும் நல்வாழ்வையும் வளர்க்கும் நேர்மறையான மேம்படுத்தும் சூழலை நாம் உருவாக்க முடியும். ஏன் மற்றவர்களுக்கு ஆறுதலும் ஊக்கமுமளிக்கும் ஒருவராக நீங்கள் மாறக்கூடாது? ஊக்கம் என்பது ஒரு சக்திவாய்ந்த மருந்து. இது தேவைப்படுவோர்க்குப் பெரிதும் உதவும். உங்களால் முடிந்த போதெல்லாம் பிறரை ஊக்குவிக்கும் வார்த்தைகளைப் பேசும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம், மற்றவர்கள் தங்கள் திறன்களில் சிறப்பாகவும் நம்பிக்கையுடனும் வளர உதவிச் செய்ய முடியும். ஜெபம்: அன்பான கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களைப் போஷிக்கும் வார்த்தைகளை பேச எனக்கு கிருபை தாரும். ஆமென்.
நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்.
“நீதிமொழிகள் 10:21 * வார்த்தைகளால் உறவுகளை வலுப்படுத்தவும், நலிவுறவும் செய்யக்கூடும் என்பதால் மக்களின் வாழ்க்கையில் வார்த்தைகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.* உங்கள் வார்த்தைகளைக் கொண்டு பிறர் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை சற்று சிந்தியுங்கள்.* நீங்கள் அன்பும் உற்சாகமுமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்களா? அல்லது, புண்படுத்தும் எதிர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்களா?* இதைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். ஏனென்றால் உங்கள் வார்த்தைகள் மற்றவர்களின் உணர்ச்சிகளையும், மேலும் அவர்களின் நாள் முழுவதையும் கூட பாதிக்கும் சக்தியைக் கொண்டுள்ளன. உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஊக்கம் தேவை. ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தவும், ஒருவரையொருவர் கட்டியெழுப்பவும் நாம் முயல வேண்டும். இதன்மூலம், வளர்ச்சியையும் நல்வாழ்வையும் வளர்க்கும் நேர்மறையான மேம்படுத்தும் சூழலை நாம் உருவாக்க முடியும். ஏன் மற்றவர்களுக்கு ஆறுதலும் ஊக்கமுமளிக்கும் ஒருவராக நீங்கள் மாறக்கூடாது? ஊக்கம் என்பது ஒரு சக்திவாய்ந்த மருந்து. இது தேவைப்படுவோர்க்குப் பெரிதும் உதவும். உங்களால் முடிந்த போதெல்லாம் பிறரை ஊக்குவிக்கும் வார்த்தைகளைப் பேசும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம், மற்றவர்கள் தங்கள் திறன்களில் சிறப்பாகவும் நம்பிக்கையுடனும் வளர உதவிச் செய்ய முடியும். ஜெபம்: அன்பான கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களைப் போஷிக்கும் வார்த்தைகளை பேச எனக்கு கிருபை தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

