வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார். சங்கீதம் 29:11 * கர்த்தருடைய வழிகளைப் பின்பற்றுகிற அனைவருக்கும் அவரே பலத்தின் ஆதாரமாக இருக்கிறார்.* சூழ்நிலைகளைக் கையாள உடலிலும், ஆத்துமாவிலும், உங்களுடைய உணர்ச்சியிலும் தம் பலத்தை அவர் கட்டளையிடுவார்.* வாழ்க்கையின் முடிவில்லா போராட்டங்களால் விரக்தியடைந்து சோர்வாக காணப்படுகிறீர்களோ?* “கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து கழுகுகளைப் போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள்” என்று வேதாகமம் கூறுகிறது. 1 சாமுவேல் 17ல் உள்ள தாவீது மற்றும் கோலியாத்தின் கதை, கர்த்தர் தம்முடைய மக்களை துன்ப காலங்களில் எவ்வாறு பலப்படுத்துகிறார் என்பதை நினைவூட்டுகிறது. தாவீது, ஒரு இளமையான மேய்ப்பன், அவன் கோலியாத் என்ற கொடூரமான போர்வீரனை எதிர்கொள்கிறான். தாவீது சிறியவனாகவும் அனுபவமற்றவனாகவும் தோன்றினாலும், அவன் கர்த்தரில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். கர்த்தர் தாவீதுக்கு தனித்துவமான ஞானத்தைக் கொடுத்தார், அதனால் அவன் வலிமைமிக்க கோலியாத்தை ஒரு கல்லாலும் கவணாலும் தோற்கடித்தான். இது கர்த்தருடைய பலத்தையும் வல்லமையையும் காட்டுகிறது. * அதுபோலவே, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்குத் தொடர்ந்து பலத்தை அளித்து வருகிறார்.* பலவீனம் மற்றும் சோர்வு நேரங்களில், அவரிடம் சென்று, புதுப்பிக்கப்பட்ட பலத்தையும், கிருபையையும் பெறுங்கள்.* கர்த்தருடைய பலம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு காரியங்களிலும் வெளிப்படும்.* அவர் உங்கள் உள்ளத்தையும், விசுவாசத்தையும், மன வலிமையையும், உறவுகளையும், பலப்படுத்துகிறார். * தினமும் அவருடைய பலத்தையும் வழிகாட்டுதலையும் நாடுங்கள், அவரைச் சார்ந்திருப்பதை வெளிப்படுத்தி, உங்கள் பலவீனத்தை அவருடைய வல்லமைக்கு ஒப்புக்கொடுங்கள்.*அவருடைய பலம் உங்களிடத்தில் பரிபூரணமாய் விளங்கும் . ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இந்த உலகத்தின் சவால்களை சமாளிக்க எனக்கு பலம் தாரும். ஆமென்.
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்.
“சங்கீதம் 29:11 * கர்த்தருடைய வழிகளைப் பின்பற்றுகிற அனைவருக்கும் அவரே பலத்தின் ஆதாரமாக இருக்கிறார்.* சூழ்நிலைகளைக் கையாள உடலிலும், ஆத்துமாவிலும், உங்களுடைய உணர்ச்சியிலும் தம் பலத்தை அவர் கட்டளையிடுவார்.* வாழ்க்கையின் முடிவில்லா போராட்டங்களால் விரக்தியடைந்து சோர்வாக காணப்படுகிறீர்களோ?* "கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து கழுகுகளைப் போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள்" என்று வேதாகமம் கூறுகிறது. 1 சாமுவேல் 17ல் உள்ள தாவீது மற்றும் கோலியாத்தின் கதை, கர்த்தர் தம்முடைய மக்களை துன்ப காலங்களில் எவ்வாறு பலப்படுத்துகிறார் என்பதை நினைவூட்டுகிறது. தாவீது, ஒரு இளமையான மேய்ப்பன், அவன் கோலியாத் என்ற கொடூரமான போர்வீரனை எதிர்கொள்கிறான். தாவீது சிறியவனாகவும் அனுபவமற்றவனாகவும் தோன்றினாலும், அவன் கர்த்தரில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். கர்த்தர் தாவீதுக்கு தனித்துவமான ஞானத்தைக் கொடுத்தார், அதனால் அவன் வலிமைமிக்க கோலியாத்தை ஒரு கல்லாலும் கவணாலும் தோற்கடித்தான். இது கர்த்தருடைய பலத்தையும் வல்லமையையும் காட்டுகிறது. * அதுபோலவே, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்குத் தொடர்ந்து பலத்தை அளித்து வருகிறார்.* பலவீனம் மற்றும் சோர்வு நேரங்களில், அவரிடம் சென்று, புதுப்பிக்கப்பட்ட பலத்தையும், கிருபையையும் பெறுங்கள்.* கர்த்தருடைய பலம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு காரியங்களிலும் வெளிப்படும்.* அவர் உங்கள் உள்ளத்தையும், விசுவாசத்தையும், மன வலிமையையும், உறவுகளையும், பலப்படுத்துகிறார். * தினமும் அவருடைய பலத்தையும் வழிகாட்டுதலையும் நாடுங்கள், அவரைச் சார்ந்திருப்பதை வெளிப்படுத்தி, உங்கள் பலவீனத்தை அவருடைய வல்லமைக்கு ஒப்புக்கொடுங்கள்.*அவருடைய பலம் உங்களிடத்தில் பரிபூரணமாய் விளங்கும் . ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இந்த உலகத்தின் சவால்களை சமாளிக்க எனக்கு பலம் தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

