← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் நெருக்கத்திலே கர்த்தர் செவிகொடுப்பார்
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் நெருக்கத்திலே கர்த்தர் செவிகொடுப்பார்

“சனிக்கிழமை, 22 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார். சங்கீதம் 120:1 * நெருக்கமான சூழ்நிலையை சமாளிப்பது ஒரு வேதனையான அனுபவம்.* இவ்வுலகில் இதுபோன்ற சூழ்நிலைகளை மனிதர்கள் சந்திப்பது சகஜம்.* துன்பம் மற்றும் பிரச்சனைகளின் போது, நாம் உதவியையும், ஆறுதலையும் தேடுவது இயற்கையானது.* நீங்கள் நம்பியவர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவியும், ஆறுதலும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்திருக்கிறீர்களோ? யோனாவின் கதை, நெருக்கத்தில் நாம் கர்த்தரிடம் திரும்பும்போது அவர் எவ்வாறு பதிலளிக்கிறார் என்பதைக் காட்டுகிறது. கர்த்தரின் சொல்லுக்கு கீழ்படிவதை யோனா தவிர்த்த போது, தான் ஒரு பெரிய மீனின் வயிற்றுக்குள் செல்ல நேரிட்டதைக் கண்டார். யோனா தனது அவநம்பிக்கையான நிலையில் ஆண்டவரிடம் இரக்கத்திற்காக கெஞ்சினார். தேவன் அந்த வேண்டுதலைக் கேட்டு, யோனாவை கரையிலே கக்கிவிடும்படி மீனுக்குக் கட்டளையிட்டார். இது யோனாவின் நெருக்கத்தில் கிடைத்த ஒரு அற்புதமான பதில். கர்த்தரின் மாறாத அன்பையும், அவரை நோக்கிக் கூப்பிடுபவர்களை மீட்பதற்கு இருக்கும் அவரது விருப்பத்தையும் இது குறிக்கிறது. * யோனாவின் நெருக்கத்தில் கர்த்தர் பதிலளித்தது போல, உங்களுடைய அழுகுரலுக்கும் பதிலளிக்க தயாராக இருக்கிறார்.* அவருடைய விசுவாசமும் இரக்கமும் அசைக்க முடியாதவை, மேலும் அவர் உங்கள் வாழ்க்கையில் ஆறுதலையும், ஆலோசனையையும், விடுதலையையும் தர விரும்புகிறார்.* பெரும் சவால்கள், வேதனைகள், நிச்சயமற்ற நிலமை போன்றவற்றை சந்திக்கும்போது, உங்கள் வேண்டுதல்களையும், ஜெபங்களையும் அவருடைய சித்தத்திற்கு ஏற்ப சீரமைத்து, நம்பிக்கையுடன் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.* அவர் நிச்சயமாகப் பதிலளித்து, நெருக்கத்திலிருந்து உங்களை விடுவிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் ஜெபங்களைக் கேட்டு, என் எல்லா நெருக்கங்களிலிருந்தும் என்னை விடுவித்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 22 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார். சங்கீதம் 120:1 * நெருக்கமான சூழ்நிலையை சமாளிப்பது ஒரு வேதனையான அனுபவம்.* இவ்வுலகில் இதுபோன்ற சூழ்நிலைகளை மனிதர்கள் சந்திப்பது சகஜம்.* துன்பம் மற்றும் பிரச்சனைகளின் போது, நாம் உதவியையும், ஆறுதலையும் தேடுவது இயற்கையானது.* நீங்கள் நம்பியவர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவியும், ஆறுதலும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்திருக்கிறீர்களோ? யோனாவின் கதை, நெருக்கத்தில் நாம் கர்த்தரிடம் திரும்பும்போது அவர் எவ்வாறு பதிலளிக்கிறார் என்பதைக் காட்டுகிறது. கர்த்தரின் சொல்லுக்கு கீழ்படிவதை யோனா தவிர்த்த போது, தான் ஒரு பெரிய மீனின் வயிற்றுக்குள் செல்ல நேரிட்டதைக் கண்டார். யோனா தனது அவநம்பிக்கையான நிலையில் ஆண்டவரிடம் இரக்கத்திற்காக கெஞ்சினார். தேவன் அந்த வேண்டுதலைக் கேட்டு, யோனாவை கரையிலே கக்கிவிடும்படி மீனுக்குக் கட்டளையிட்டார். இது யோனாவின் நெருக்கத்தில் கிடைத்த ஒரு அற்புதமான பதில். கர்த்தரின் மாறாத அன்பையும், அவரை நோக்கிக் கூப்பிடுபவர்களை மீட்பதற்கு இருக்கும் அவரது விருப்பத்தையும் இது குறிக்கிறது. * யோனாவின் நெருக்கத்தில் கர்த்தர் பதிலளித்தது போல, உங்களுடைய அழுகுரலுக்கும் பதிலளிக்க தயாராக இருக்கிறார்.* அவருடைய விசுவாசமும் இரக்கமும் அசைக்க முடியாதவை, மேலும் அவர் உங்கள் வாழ்க்கையில் ஆறுதலையும், ஆலோசனையையும், விடுதலையையும் தர விரும்புகிறார்.* பெரும் சவால்கள், வேதனைகள், நிச்சயமற்ற நிலமை போன்றவற்றை சந்திக்கும்போது, உங்கள் வேண்டுதல்களையும், ஜெபங்களையும் அவருடைய சித்தத்திற்கு ஏற்ப சீரமைத்து, நம்பிக்கையுடன் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.* அவர் நிச்சயமாகப் பதிலளித்து, நெருக்கத்திலிருந்து உங்களை விடுவிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் ஜெபங்களைக் கேட்டு, என் எல்லா நெருக்கங்களிலிருந்தும் என்னை விடுவித்தருளும். ஆமென்.