← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் கர்த்தருக்குக் கணக்கு ஒப்புவிக்கிறீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் கர்த்தருக்குக் கணக்கு ஒப்புவிக்கிறீர்கள்.

“திங்கட்கிழமை, 31 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான். ரோமர் 14:12 மத்தேயு 25-ன் படி, புற தேசத்துக்குப் பிரயாணம் போகிற ஒரு மனுஷன் தனது ஆஸ்தியை மூன்று ஊழியக்காரர்களிடம் ஒப்படைத்தான். ஒருவனுக்கு ஐந்து தாலந்தும், மற்றொருவனுக்கு இரண்டு தாலந்தும், கடைசியில் ஒருவனுக்கு ஒரு தாலந்தும் கொடுத்தான். முதல் இரண்டு ஊழியக்காரரும் முதலீடு செய்து வியாபாரம் பண்ணி, எஜமானின் செல்வத்தை இரட்டிப்பாக்கினர். இருப்பினும், மூன்றாவது ஊழியக்காரன் அவனுடைய பயம் மற்றும் சோம்பலின் காரணமாக தனது ஒரு தாலந்தை மண்ணில் புதைத்து வைத்துவிட்டான். எஜமானன் திரும்பி வந்ததும், அவர் தனது ஊழியக்காரரை அழைத்து கணக்குக் கேட்டார். * இந்த உவமை கர்த்தருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.* நாம் அனைவரும் ஒரு நாள் கர்த்தருக்கு முன்பாக நின்று, நமது செயல்கள், எடுத்த முடிவுகள், மேலும் பூமியில் நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதற்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.* கர்த்தர் உங்களுக்கு குறிப்பிட்ட திறன்கள், திறமைகள் மற்றும் செல்வங்களைக் கொடுத்துள்ளார், அவருடைய திட்டம் மற்றும் நோக்கங்களுக்கு ஏற்ப அவற்றை நீங்கள் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். * கர்த்தரின் ஆசீர்வாதங்களின் உண்மையுள்ள ஊழியக்காரராக இருக்க நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். பேராசை, சுயநலம், பயம் அல்லது சோம்பலினாலேயோ அவற்றை மறைத்து வைக்க வேண்டாம்.* மற்றவர்களை நேசிப்பதற்கும், சேவை செய்வதற்கும், நற்செய்தியைப் பரப்புவதற்கும், கர்த்தரை மகிமைப்படுத்துவதற்கும் உங்கள் நேரத்தையும், திறமைகளையும், செல்வங்களையும் செலவிட வேண்டும்.* உங்கள் பரலோகத் தகப்பன் உங்களை எவ்வளவு உன்னிப்பாகக் கவனித்து, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார் என்பதையும் இது வலியுறுத்துகிறது.* தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீங்கள் எனக்குக் கொடுக்கும் அனைத்திற்கும் பொறுப்புடன் இருக்க எனக்கு உதவிச் செய்யும். உமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழவும், உங்கள் பெயருக்கு பெருமை சேர்க்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 31 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான். ரோமர் 14:12 மத்தேயு 25-ன் படி, புற தேசத்துக்குப் பிரயாணம் போகிற ஒரு மனுஷன் தனது ஆஸ்தியை மூன்று ஊழியக்காரர்களிடம் ஒப்படைத்தான். ஒருவனுக்கு ஐந்து தாலந்தும், மற்றொருவனுக்கு இரண்டு தாலந்தும், கடைசியில் ஒருவனுக்கு ஒரு தாலந்தும் கொடுத்தான். முதல் இரண்டு ஊழியக்காரரும் முதலீடு செய்து வியாபாரம் பண்ணி, எஜமானின் செல்வத்தை இரட்டிப்பாக்கினர். இருப்பினும், மூன்றாவது ஊழியக்காரன் அவனுடைய பயம் மற்றும் சோம்பலின் காரணமாக தனது ஒரு தாலந்தை மண்ணில் புதைத்து வைத்துவிட்டான். எஜமானன் திரும்பி வந்ததும், அவர் தனது ஊழியக்காரரை அழைத்து கணக்குக் கேட்டார். * இந்த உவமை கர்த்தருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.* நாம் அனைவரும் ஒரு நாள் கர்த்தருக்கு முன்பாக நின்று, நமது செயல்கள், எடுத்த முடிவுகள், மேலும் பூமியில் நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதற்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.* கர்த்தர் உங்களுக்கு குறிப்பிட்ட திறன்கள், திறமைகள் மற்றும் செல்வங்களைக் கொடுத்துள்ளார், அவருடைய திட்டம் மற்றும் நோக்கங்களுக்கு ஏற்ப அவற்றை நீங்கள் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். * கர்த்தரின் ஆசீர்வாதங்களின் உண்மையுள்ள ஊழியக்காரராக இருக்க நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். பேராசை, சுயநலம், பயம் அல்லது சோம்பலினாலேயோ அவற்றை மறைத்து வைக்க வேண்டாம்.* மற்றவர்களை நேசிப்பதற்கும், சேவை செய்வதற்கும், நற்செய்தியைப் பரப்புவதற்கும், கர்த்தரை மகிமைப்படுத்துவதற்கும் உங்கள் நேரத்தையும், திறமைகளையும், செல்வங்களையும் செலவிட வேண்டும்.* உங்கள் பரலோகத் தகப்பன் உங்களை எவ்வளவு உன்னிப்பாகக் கவனித்து, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார் என்பதையும் இது வலியுறுத்துகிறது.* தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீங்கள் எனக்குக் கொடுக்கும் அனைத்திற்கும் பொறுப்புடன் இருக்க எனக்கு உதவிச் செய்யும். உமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழவும், உங்கள் பெயருக்கு பெருமை சேர்க்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.