ஞாயிறு, 16 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள். சங்கீதம் 100:2 * ஆராதனை என்பது ஒரு செயலாக்கமோ அல்லது மற்றவர்களைக் கவருவதற்காகவோ அல்ல.* மாறாக, உயிரோடு இருக்கிற தேவனை சந்திப்பதற்கும், அவருடைய பிரசன்னத்தை உணர்ந்து, அவர் உண்மையிலேயே தகுதியானவராக இருப்பதால் அவரைத் தொழுது கொள்வதற்கும் உரிய விலைமதிப்பற்ற வாய்ப்பாகும்.* பாடுவது, ஜெபம் செய்வது, வேதம் வாசிப்பது அல்லது சேவைச் செய்வது போன்ற பல்வேறு வழிகளில் உங்கள் ஆராதனையை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தலாம். நம்மை உருவாக்கினவர் தம்முடைய மக்களின் உண்மையான ஆராதனையில் மகிழ்ச்சியடைகிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் 2 சாமுவேல் 6-இல் தாவீது உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுவரும்போது நடக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியுடன், சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக தாவீது நடனமாடுகிறார். அவரது ஆராதனை முழுபலத்தோடும், உண்மையோடும், கெம்பீர சத்தத்தோடும் காணப்படுகிறது. அது கர்த்தர் மீதான அவரது ஆழ்ந்த அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கிறது. சுயசிந்தனையினாலோ அல்லது மற்றவர்களின் கருத்துகளினாலோ அதைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. * ஆம்! ஆராதனை என்பது நமது கர்த்தரின் மகத்துவத்திற்கும், நற்குணத்திற்கும், நம்பிக்கைக்கும் உரிய பிரதிபலிப்பாகும்.* இதயப்பூர்வமான ஆராதனையின் மூலம் உங்கள் சிருஷ்டிகருடன் ஆழமான தொடர்பை நீங்கள் அனுபவிக்க முடியும். * ஆவியில் அவரைத் தொழுது கொள்ளுங்கள்.* அவர் உங்களுக்காகச் செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் அவரைப் போற்றுங்கள்.உங்கள் சத்தத்தினாலும், வாத்தியங்களினாலும் உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அவரைத் துதியுங்கள். நீங்கள் கர்த்தரைத் தொழுது கொள்ளும்போது, அவர் உங்களில் மகிழ்ச்சியடைந்து, ஏராளமான ஆசீர்வாதங்களை உங்கள் மீது பொழிவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உண்மையோடும், கெம்பீர சத்தத்தோடும் உம்மை ஆராதனை செய்யும் இருதயத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.
மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர்...
“சங்கீதம் 100:2 * ஆராதனை என்பது ஒரு செயலாக்கமோ அல்லது மற்றவர்களைக் கவருவதற்காகவோ அல்ல.* மாறாக, உயிரோடு இருக்கிற தேவனை சந்திப்பதற்கும், அவருடைய பிரசன்னத்தை உணர்ந்து, அவர் உண்மையிலேயே தகுதியானவராக இருப்பதால் அவரைத் தொழுது கொள்வதற்கும் உரிய விலைமதிப்பற்ற வாய்ப்பாகும்.* பாடுவது, ஜெபம் செய்வது, வேதம் வாசிப்பது அல்லது சேவைச் செய்வது போன்ற பல்வேறு வழிகளில் உங்கள் ஆராதனையை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தலாம். நம்மை உருவாக்கினவர் தம்முடைய மக்களின் உண்மையான ஆராதனையில் மகிழ்ச்சியடைகிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் 2 சாமுவேல் 6-இல் தாவீது உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுவரும்போது நடக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியுடன், சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக தாவீது நடனமாடுகிறார். அவரது ஆராதனை முழுபலத்தோடும், உண்மையோடும், கெம்பீர சத்தத்தோடும் காணப்படுகிறது. அது கர்த்தர் மீதான அவரது ஆழ்ந்த அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கிறது. சுயசிந்தனையினாலோ அல்லது மற்றவர்களின் கருத்துகளினாலோ அதைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. * ஆம்! ஆராதனை என்பது நமது கர்த்தரின் மகத்துவத்திற்கும், நற்குணத்திற்கும், நம்பிக்கைக்கும் உரிய பிரதிபலிப்பாகும்.* இதயப்பூர்வமான ஆராதனையின் மூலம் உங்கள் சிருஷ்டிகருடன் ஆழமான தொடர்பை நீங்கள் அனுபவிக்க முடியும். * ஆவியில் அவரைத் தொழுது கொள்ளுங்கள்.* அவர் உங்களுக்காகச் செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் அவரைப் போற்றுங்கள்.*உங்கள் சத்தத்தினாலும், வாத்தியங்களினாலும் உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அவரைத் துதியுங்கள்.* நீங்கள் கர்த்தரைத் தொழுது கொள்ளும்போது, அவர் உங்களில் மகிழ்ச்சியடைந்து, ஏராளமான ஆசீர்வாதங்களை உங்கள் மீது பொழிவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உண்மையோடும், கெம்பீர சத்தத்தோடும் உம்மை ஆராதனை செய்யும் இருதயத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

