சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசாயா 41:10 உங்கள் வாழ்க்கையின் எதிர்காலச் சவால்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? வெற்றிகரமான வணிகம் அல்லது குடும்பத்திற்கான உங்கள் திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பதைக் கண்டுபிடிக்க நீங்கள் இன்னும் சிரமப்படுகிறீர்களா?ஆம், எல்லாவற்றையும் நீங்களே நிர்வகிப்பது கடினமாயிருக்கலாம். ஆனால், உங்கள் பிரச்சனைகளில் உதவி செய்யவும் அவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் இயேசு ஆயத்தமாயிருக்கிறார்.அவரை ஓர் உங்களுடைய பங்குதாரராக்குங்கள். எல்லாவற்றையும் அவருடன் தெரிவித்து, அவருடைய வழிகாட்டுதலைப் பெற்று, அதைத் துல்லியமாய்க் கடைப்பிடியுங்கள். காரியங்களை மேம்படுத்தவும், பகுப்பாய்வு செய்யவும், நன்றி செலுத்தவும் அவரிடம் வருவதை வழக்கமாக்குங்கள்.அவர் தம்முடைய நீதியின் வலக்கரத்தால் உங்களைத் தாங்கி, உங்கள் ஜெயத்தை உறுதிப்படுத்துவார். பலங்கொண்டு திடமனதாயிருங்கள். தன்னம்பிக்கையுடன் முன்னேறுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து உமது வலக்கரம் என்னைத் தாங்கி, என் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் வெற்றிபெற எனக்கு உதவி செய்யும். ஆமென்.
தேவன் தம்முடைய நீதியின் வலது கரத்தால் என்னைத் தாங்குவார்
“சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசாயா 41:10 உங்கள் வாழ்க்கையின் எதிர்காலச் சவால்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? வெற்றிகரமான வணிகம் அல்லது குடும்பத்திற்கான உங்கள் திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பதைக் கண்டுபிடிக்க நீங்கள் இன்னும் சிரமப்படுகிறீர்களா?ஆம், எல்லாவற்றையும் நீங்களே நிர்வகிப்பது கடினமாயிருக்கலாம். ஆனால், உங்கள் பிரச்சனைகளில் உதவி செய்யவும் அவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் இயேசு ஆயத்தமாயிருக்கிறார்.அவரை ஓர் உங்களுடைய பங்குதாரராக்குங்கள். எல்லாவற்றையும் அவருடன் தெரிவித்து, அவருடைய வழிகாட்டுதலைப் பெற்று, அதைத் துல்லியமாய்க் கடைப்பிடியுங்கள். காரியங்களை மேம்படுத்தவும், பகுப்பாய்வு செய்யவும், நன்றி செலுத்தவும் அவரிடம் வருவதை வழக்கமாக்குங்கள்.அவர் தம்முடைய நீதியின் வலக்கரத்தால் உங்களைத் தாங்கி, உங்கள் ஜெயத்தை உறுதிப்படுத்துவார். பலங்கொண்டு திடமனதாயிருங்கள். தன்னம்பிக்கையுடன் முன்னேறுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து உமது வலக்கரம் என்னைத் தாங்கி, என் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் வெற்றிபெற எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

