← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் மீறுதல்களைத் தேவன் மன்னிக்கிறார்.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் மீறுதல்களைத் தேவன் மன்னிக்கிறார்.

“செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; தேவனே நீரோ எங்களுடைய மீறுதல்களை மன்னிக்கிறீர். சங்கீதம் 65:3 (TA-IRV) கடந்த காலத் தவறுகள் மற்றும் பாவங்களின் குற்ற உணர்ச்சியால் நீங்கள் பாரமடைந்துக் காணப்படுகிறீர்களா? ஜெபத்தில் இயேசுவிடம் வந்து உங்கள் பாவங்களைப் பற்றிப் பேச நீங்கள் தயக்கம் கொள்ளுகிறீர்களா? தேவன் நம் தவறுகளை மன்னித்து, நிபந்தனையின்றி நம்மை நேசிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குற்ற உணர்வு உங்களை ஆட்கொள்ள விடாதீர்கள். திறந்த மனதுடன் இயேசுவை அணுகுங்கள். உங்கள் சூழ்நிலை எதுவாயிருந்தாலும், தைரியமாய் அவரிடம் வாருங்கள். அவர் ஒருவரே உங்கள் பாவங்களை மன்னித்து உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும். மனந்திரும்பி, சரியான நடவடிக்கை எடுங்கள். உங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்து, கீழ்ப்படிதலில் உறுதியாயிருங்கள். அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுவதற்கு அவருடைய கிருபையையும் பலத்தையும் தேடுங்கள். உங்கள் வாழ்க்கை மீண்டும் மலரும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் மீறுதல்களை மன்னித்து, கீழ்ப்படிதலுள்ள நபராய் என்னை மாற்றும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; தேவனே நீரோ எங்களுடைய மீறுதல்களை மன்னிக்கிறீர். சங்கீதம் 65:3 (TA-IRV) கடந்த காலத் தவறுகள் மற்றும் பாவங்களின் குற்ற உணர்ச்சியால் நீங்கள் பாரமடைந்துக் காணப்படுகிறீர்களா? ஜெபத்தில் இயேசுவிடம் வந்து உங்கள் பாவங்களைப் பற்றிப் பேச நீங்கள் தயக்கம் கொள்ளுகிறீர்களா? தேவன் நம் தவறுகளை மன்னித்து, நிபந்தனையின்றி நம்மை நேசிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குற்ற உணர்வு உங்களை ஆட்கொள்ள விடாதீர்கள். திறந்த மனதுடன் இயேசுவை அணுகுங்கள். உங்கள் சூழ்நிலை எதுவாயிருந்தாலும், தைரியமாய் அவரிடம் வாருங்கள். அவர் ஒருவரே உங்கள் பாவங்களை மன்னித்து உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும். மனந்திரும்பி, சரியான நடவடிக்கை எடுங்கள். உங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்து, கீழ்ப்படிதலில் உறுதியாயிருங்கள். அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுவதற்கு அவருடைய கிருபையையும் பலத்தையும் தேடுங்கள். உங்கள் வாழ்க்கை மீண்டும் மலரும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் மீறுதல்களை மன்னித்து, கீழ்ப்படிதலுள்ள நபராய் என்னை மாற்றும். ஆமென்.