செவ்வாய், 26 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். சங்கீதம் 57:2 தேவன் உங்களைத் தனித்துவமாய்ப் படைத்து, ஒரு நோக்கத்திற்காக உங்களை அழைத்திருக்கிறார். அந்த நோக்கத்திற்காக அவர் உங்களுக்குக் குறிப்பிட்ட திறமைகளையும், தாலந்துகளையும் அளித்துள்ளார். கிறிஸ்து உங்களை மீட்டெடுத்தபோது, நீங்கள் அவருக்குச் சொந்தமானீர்கள்; அவர் உங்கள் வாழ்க்கையின் எஜமானனாய் இருக்கிறார். அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவது என்பது பிதாவின் சித்தத்தைச் செய்வதாகும். இது இல்லாமல், நீங்கள் பரலோகத்தில் நுழைய முடியாது. எனவே, நீங்கள் எந்தக் கிரயம் செலுத்தியும் அவருடைய சித்தத்தைச் செய்யத் தயாராயிருக்க வேண்டும். ஒரு இழப்பைச் சந்தித்தாலும், பின்வாங்காதீர்கள். தியாகம் செய்யத் தயாராயிருங்கள். இருப்பினும், இதை உங்கள் சுயமாய் நிறைவேற்றுவது சாத்தியமற்றதாகும். உங்களுக்கு எஜமானரின் உதவி தேவை. பரிசுத்த ஆவியின் மூலம் உங்கள் வாழ்க்கையை முழுமையாய்க் கட்டுப்படுத்த அவர் ஆயத்தமாய் இருக்கிறார். அவருடைய நோக்கத்தின்படி உங்களை வழிநடத்துகிறார். ஆனால் கேள்வி என்னவென்றால், நீங்கள் அதை விரும்புகிறீர்களா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்கான உமுடைய நோக்கத்தை நிறைவேற்றும். ஆமென்.
தேவன் உங்களுக்காகத் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவார்
“செவ்வாய், 26 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். சங்கீதம் 57:2 தேவன் உங்களைத் தனித்துவமாய்ப் படைத்து, ஒரு நோக்கத்திற்காக உங்களை அழைத்திருக்கிறார். அந்த நோக்கத்திற்காக அவர் உங்களுக்குக் குறிப்பிட்ட திறமைகளையும், தாலந்துகளையும் அளித்துள்ளார். கிறிஸ்து உங்களை மீட்டெடுத்தபோது, நீங்கள் அவருக்குச் சொந்தமானீர்கள்; அவர் உங்கள் வாழ்க்கையின் எஜமானனாய் இருக்கிறார். அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவது என்பது பிதாவின் சித்தத்தைச் செய்வதாகும். இது இல்லாமல், நீங்கள் பரலோகத்தில் நுழைய முடியாது. எனவே, நீங்கள் எந்தக் கிரயம் செலுத்தியும் அவருடைய சித்தத்தைச் செய்யத் தயாராயிருக்க வேண்டும். ஒரு இழப்பைச் சந்தித்தாலும், பின்வாங்காதீர்கள். தியாகம் செய்யத் தயாராயிருங்கள். இருப்பினும், இதை உங்கள் சுயமாய் நிறைவேற்றுவது சாத்தியமற்றதாகும். உங்களுக்கு எஜமானரின் உதவி தேவை. பரிசுத்த ஆவியின் மூலம் உங்கள் வாழ்க்கையை முழுமையாய்க் கட்டுப்படுத்த அவர் ஆயத்தமாய் இருக்கிறார். அவருடைய நோக்கத்தின்படி உங்களை வழிநடத்துகிறார். ஆனால் கேள்வி என்னவென்றால், நீங்கள் அதை விரும்புகிறீர்களா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்கான உமுடைய நோக்கத்தை நிறைவேற்றும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

