← செய்திகளுக்குத் திரும்பு
புத்திசாலியாக இருக்க, இயேசுவின் போதனைகளைக் கேட்டு அவற்றைப் பின்பற்றுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

புத்திசாலியாக இருக்க, இயேசுவின் போதனைகளைக் கேட்டு அவற்றைப்...

“திங்கட்கிழமை, 6 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். மத்தேயு 7:24 ஒரு புத்திசாலி நபர், நல்ல முடிவுகளையும் தீர்ப்புகளையும் எடுக்க தங்கள் ஞானத்தையும் அனுபவத்தையும் பயன்படுத்தக்கூடியவர். அவர்களுடையப் பார்வை பெரிய நோக்கத்தில் இருக்கும், மேலும் அவர்களின் செயல்களில் நீண்டகால விளைவுகளை புரிந்து கொள்ள முடியும். ஞானம் கிடைத்தால் மட்டும் போதாது. மற்றவர்களுக்கு உதவவும், அவர்களை ஆசீர்வதிக்கவும் நமது ஞானத்தையும் புரிதலையும் பயன்படுத்த வேண்டும். ஞானமுள்ள நபராக இருப்பது மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்கு முக்கியமாகும். பொருத்தமான தருணத்தில் விவேகமான ஆலோசனைகளை வழங்கவும், மற்றவர்களை சரியான திசையில் வழிநடத்தவும், சமூகங்கள், குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு பொருத்தமான உத்திகளையும் தீர்மானங்களையும் வகுக்க ஞானம் தேவைப்படுகிறது. ணநமது செயல்கள் மற்றும் உறவுகளில் விவேகத்துடன் இருப்பது ஒருவரை புத்திசாலி என்று வகைப்படுத்தும் பகுதியின் கீழ் வருகிறது. ஒரு புத்திசாலி நபர் எதிரியின் தீய திட்டங்களை அறிந்து, அந்த ஆபத்தான வலையிலிருந்து தப்பித்துக் கொள்பவராய் இருப்பார். நீங்கள் எப்படிப்பட்ட புத்திசாலியாக இருக்கிறீர்கள்? # ஒரு நபர் இயேசுவிடம் கேட்டு அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் புத்திசாலியாகிறார். ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து அவரை வழிநடத்துகிறார்.# இங்கு கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், இயேசுவின் வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கான அர்ப்பணிப்பு.# புத்திசாலியாய் இருப்பதற்கு இயேசுவுக்குக் கீழ்ப்படிதல் அதிக அளவில் தேவைப்படுகிறது. அதனால்,# தாழ்மையான இருதயத்துடன் இயேசுவிடம் வாருங்கள்.# அவருடன் இணைந்திருங்கள், மேலும் அவருடைய போதனைகளைப் பின்பற்றுவதற்கான ஆழ்ந்த அர்ப்பணிப்போடு அவரிடமிருந்து கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள்.# அவரது வார்த்தைகள் உயிர் கொடுக்கக்கூடியவை, ஆற்றல் மிக்கவை, சக்தி வாய்ந்தவை.# அவை உங்கள் தன்மையை மறுரூபப்படுத்தி, உங்களை புத்திசாலியாக மாற்றும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது போதனைகளை உண்மையாகப் பின்பற்றவும், நான் செய்யும் எல்லாவற்றிலும் புத்திசாலியாக இருக்கவும் எனக்கு உதவிச் செய்யும் ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். மத்தேயு 7:24 ஒரு புத்திசாலி நபர், நல்ல முடிவுகளையும் தீர்ப்புகளையும் எடுக்க தங்கள் ஞானத்தையும் அனுபவத்தையும் பயன்படுத்தக்கூடியவர். அவர்களுடையப் பார்வை பெரிய நோக்கத்தில் இருக்கும், மேலும் அவர்களின் செயல்களில் நீண்டகால விளைவுகளை புரிந்து கொள்ள முடியும். ஞானம் கிடைத்தால் மட்டும் போதாது. மற்றவர்களுக்கு உதவவும், அவர்களை ஆசீர்வதிக்கவும் நமது ஞானத்தையும் புரிதலையும் பயன்படுத்த வேண்டும். ஞானமுள்ள நபராக இருப்பது மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்கு முக்கியமாகும். பொருத்தமான தருணத்தில் விவேகமான ஆலோசனைகளை வழங்கவும், மற்றவர்களை சரியான திசையில் வழிநடத்தவும், சமூகங்கள், குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு பொருத்தமான உத்திகளையும் தீர்மானங்களையும் வகுக்க ஞானம் தேவைப்படுகிறது. ணநமது செயல்கள் மற்றும் உறவுகளில் விவேகத்துடன் இருப்பது ஒருவரை புத்திசாலி என்று வகைப்படுத்தும் பகுதியின் கீழ் வருகிறது. ஒரு புத்திசாலி நபர் எதிரியின் தீய திட்டங்களை அறிந்து, அந்த ஆபத்தான வலையிலிருந்து தப்பித்துக் கொள்பவராய் இருப்பார். நீங்கள் எப்படிப்பட்ட புத்திசாலியாக இருக்கிறீர்கள்? # ஒரு நபர் இயேசுவிடம் கேட்டு அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் புத்திசாலியாகிறார். ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து அவரை வழிநடத்துகிறார்.# இங்கு கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், இயேசுவின் வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கான அர்ப்பணிப்பு.# புத்திசாலியாய் இருப்பதற்கு இயேசுவுக்குக் கீழ்ப்படிதல் அதிக அளவில் தேவைப்படுகிறது. அதனால்,# தாழ்மையான இருதயத்துடன் இயேசுவிடம் வாருங்கள்.# அவருடன் இணைந்திருங்கள், மேலும் அவருடைய போதனைகளைப் பின்பற்றுவதற்கான ஆழ்ந்த அர்ப்பணிப்போடு அவரிடமிருந்து கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள்.# அவரது வார்த்தைகள் உயிர் கொடுக்கக்கூடியவை, ஆற்றல் மிக்கவை, சக்தி வாய்ந்தவை.# அவை உங்கள் தன்மையை மறுரூபப்படுத்தி, உங்களை புத்திசாலியாக மாற்றும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது போதனைகளை உண்மையாகப் பின்பற்றவும், நான் செய்யும் எல்லாவற்றிலும் புத்திசாலியாக இருக்கவும் எனக்கு உதவிச் செய்யும் ஆமென்.