புதன்கிழமை, 8 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். மத்தேயு 16:24. இயேசுவைப் பின்தொடர்வது ஒரு விலையேறப்பட்ட காரியம். அவரது அடிச்சுவடுகளையும் போதனைகளையும் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது, ஆனால் அது எளிதானது அல்ல. உலகம் இயேசுவை இகழ்வதால், அவருடைய சீஷர்களையும் இகழ்ந்து விடும். அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுவதில் உள்ள சிரமங்களும் சவால்களும் அவரைப் பின்பற்ற விரும்புவோருக்கு சிலுவையாக இருக்கிறது. நாம் நேர்மையாக வாழும்போது, அநியாயமாக விஷயங்களைத் தங்களுக்குச் சாதகமாக கையாள விரும்புபவர்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் உண்மையாக இருந்து, நேர்மையுடன் வாழும்போது, உங்களின் கீழ் பணிபுரிவோர் அல்லது உங்கள் மேற்பார்வையாளர்கள், குறிப்பாக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு குறிப்பிடத்தக்க சிரமம் உருவாகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்களை தவறு செய்ததாக குற்றம் சாட்ட முயற்சி செய்யலாம் மற்றும் உங்கள் முன்னேற்றத்தையும் சாதனையையும் தடுக்கலாம். என்றாலும், தேவனுடையப் பிள்ளையாக,# மற்றவர்களை மேற்கொள்ள, பல்வேறு சூழ்நிலைகளில் உங்கள் அகங்காரத்தை விட்டுவிட நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.# உங்கள் தனிப்பட்ட திட்டங்களையும் இலட்சியங்களையும் கைவிட்டு, கர்த்தரின் திட்டத்திற்கு அடிபணிய வேண்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய விருப்பத்தைவிட உமது சித்தத்துக்கும் வழிகளுக்கும் அடிபணிய எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
இயேசுவின் சீஷராக இருக்க விரும்புபவர்கள் தங்களைத் தாங்களே...
“புதன்கிழமை, 8 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். மத்தேயு 16:24. இயேசுவைப் பின்தொடர்வது ஒரு விலையேறப்பட்ட காரியம். அவரது அடிச்சுவடுகளையும் போதனைகளையும் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது, ஆனால் அது எளிதானது அல்ல. உலகம் இயேசுவை இகழ்வதால், அவருடைய சீஷர்களையும் இகழ்ந்து விடும். அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுவதில் உள்ள சிரமங்களும் சவால்களும் அவரைப் பின்பற்ற விரும்புவோருக்கு சிலுவையாக இருக்கிறது. நாம் நேர்மையாக வாழும்போது, அநியாயமாக விஷயங்களைத் தங்களுக்குச் சாதகமாக கையாள விரும்புபவர்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் உண்மையாக இருந்து, நேர்மையுடன் வாழும்போது, உங்களின் கீழ் பணிபுரிவோர் அல்லது உங்கள் மேற்பார்வையாளர்கள், குறிப்பாக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு குறிப்பிடத்தக்க சிரமம் உருவாகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்களை தவறு செய்ததாக குற்றம் சாட்ட முயற்சி செய்யலாம் மற்றும் உங்கள் முன்னேற்றத்தையும் சாதனையையும் தடுக்கலாம். என்றாலும், தேவனுடையப் பிள்ளையாக,# மற்றவர்களை மேற்கொள்ள, பல்வேறு சூழ்நிலைகளில் உங்கள் அகங்காரத்தை விட்டுவிட நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.# உங்கள் தனிப்பட்ட திட்டங்களையும் இலட்சியங்களையும் கைவிட்டு, கர்த்தரின் திட்டத்திற்கு அடிபணிய வேண்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய விருப்பத்தைவிட உமது சித்தத்துக்கும் வழிகளுக்கும் அடிபணிய எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

