ஞாயிற்றுக்கிழமை, 27 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. 1 தீமோத்தேயு 4:12 * கர்த்தரின் பிள்ளைகளாகிய நீங்கள் உங்கள் வார்த்தைகள், செயல்கள் மற்றும் பரிசுத்தம் ஆகியவற்றின் மூலம் சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும்.* என்ன பிரசங்கிக்கிறோம், எவ்வளவு பிரசங்கிக்கிறோம் என்பது முக்கியமல்ல.* நாம் எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம், அது இயேசுவின் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நல்ல சமாரியனின் உவமை, காயமடைந்த அந்நியனுக்கு உதவுவதன் மூலம் அவனுடைய இரக்கத்தையும், தன்னலமற்ற தன்மையையும் காண்பிக்கிறது. எந்த விதமான உதவியும் செய்யாமல் காயம்பட்டவனை விட்டு விலகிச்சென்ற மத தலைவர்களின் நடத்தைக்கு முன்பாக சமாரியனின் செயல்கள் தனித்து நின்று குரல் கொடுத்தன. சமாரியன் கர்த்தரின் அன்பை செயலில் வெளிப்படுத்தினான், மேலும் அவனது செயல்கள் வார்த்தைகளை விட சத்தமாக பேசுகின்றன. * உதாரணமாக இருப்பது என்பது நாம் நம்புகிற நல்ல நெறிகளின் படி வாழ்வதாகும்.* நம்முடைய உண்மையான அன்பு, இரக்கம், நேர்மை மற்றும் பணிவு ஆகியவை கிறிஸ்துவின் இருதயத்தை பிரதிபலிக்கின்றன மற்றும் எந்த பிரசங்கத்தையும் விட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.* மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் என்று பரிசுத்த வேதாகமத்தில் மற்றொரு வசனம், சொல்கிறது. * நீங்கள் முன்மாதிரியாக வாழ்வது, உங்கள் மூலம் கிறிஸ்துவை அனைவருக்கும் சரியான முறையில் தெரியப்படுத்தும்.* உங்கள் உண்மையான செயல்களைப் பார்க்கும் கர்த்தர், உங்களை ஆசீர்வதித்து, பலப்படுத்தி இன்னும் பலருக்கு ஆசீர்வாதமாக மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய முன்மாதிரியான நடத்தையின் மூலம் உமக்கு உயிருள்ள சாட்சியாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
நீங்கள் உங்கள் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும்,...
“ஞாயிற்றுக்கிழமை, 27 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. 1 தீமோத்தேயு 4:12 * கர்த்தரின் பிள்ளைகளாகிய நீங்கள் உங்கள் வார்த்தைகள், செயல்கள் மற்றும் பரிசுத்தம் ஆகியவற்றின் மூலம் சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும்.* என்ன பிரசங்கிக்கிறோம், எவ்வளவு பிரசங்கிக்கிறோம் என்பது முக்கியமல்ல.* நாம் எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம், அது இயேசுவின் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நல்ல சமாரியனின் உவமை, காயமடைந்த அந்நியனுக்கு உதவுவதன் மூலம் அவனுடைய இரக்கத்தையும், தன்னலமற்ற தன்மையையும் காண்பிக்கிறது. எந்த விதமான உதவியும் செய்யாமல் காயம்பட்டவனை விட்டு விலகிச்சென்ற மத தலைவர்களின் நடத்தைக்கு முன்பாக சமாரியனின் செயல்கள் தனித்து நின்று குரல் கொடுத்தன. சமாரியன் கர்த்தரின் அன்பை செயலில் வெளிப்படுத்தினான், மேலும் அவனது செயல்கள் வார்த்தைகளை விட சத்தமாக பேசுகின்றன. * உதாரணமாக இருப்பது என்பது நாம் நம்புகிற நல்ல நெறிகளின் படி வாழ்வதாகும்.* நம்முடைய உண்மையான அன்பு, இரக்கம், நேர்மை மற்றும் பணிவு ஆகியவை கிறிஸ்துவின் இருதயத்தை பிரதிபலிக்கின்றன மற்றும் எந்த பிரசங்கத்தையும் விட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.* மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் என்று பரிசுத்த வேதாகமத்தில் மற்றொரு வசனம், சொல்கிறது. * நீங்கள் முன்மாதிரியாக வாழ்வது, உங்கள் மூலம் கிறிஸ்துவை அனைவருக்கும் சரியான முறையில் தெரியப்படுத்தும்.* உங்கள் உண்மையான செயல்களைப் பார்க்கும் கர்த்தர், உங்களை ஆசீர்வதித்து, பலப்படுத்தி இன்னும் பலருக்கு ஆசீர்வாதமாக மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய முன்மாதிரியான நடத்தையின் மூலம் உமக்கு உயிருள்ள சாட்சியாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

