← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாக இருக்கட்டும்.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாக இருக்கட்டும்.

“ரமேறினதாயுமிருப்பதாக. கொலோசெயர் 4:6 * நமது உரையாடல்களுக்கு உறவுகளை வளர்க்கும் அல்லது அழிக்கும் ஆற்றல் உண்டு.* அவைகள், மக்கள் கர்த்தர் மீது நம்பிக்கை வைக்கக்கூடியதாய் மாறலாம் அல்லது மக்களை இயேசுவிடம் இருந்து பிரிக்கலாம். * நமது உரையாடல்களில் கிருபையும், சாரத்தோடும் இணைந்திருக்க வேண்டியதன் அவசியத்தை மேற்கண்ட வசனம் கூறுகிறது.* ஒரு பிரபலமான பழமொழியின்படி, "வெறுமையான பாத்திரங்கள் அதிக சத்தம் எழுப்புகின்றன".* ஒரு சில வார்த்தைகள் பேசினாலும், அன்பாகவும், தேவையான கருத்துடனும், சாரத்துடனும் பேசுவதில் கவனம் செலுத்துங்கள். சமாரியா கிணற்றினருகே இயேசுவுக்கும் சமாரியப் பெண்ணுக்கும் இடையிலான சந்திப்பு, கிருபையுடன் கூடிய உரையாடல்களின் தெளிவான உதாரணத்தைக் காட்டுகிறது. சமூக விதிமுறைகள் மற்றும் வேறுபாடுகள் இருந்தபோதிலும், இயேசு அவளை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தினார். அவர் அவளது வாழ்க்கையைப் பற்றி கனிவாகப் பேசினார், அவளுடைய கடந்த காலத்தைக் குறித்து குற்றப்படுத்தாமல் எடுத்துக் கூறினார். இயேசுவின் வார்த்தைகள் அவளுடைய இதயத்தை ஆழமாகத் தொட்டது, அவரை மேசியாவாக ஒப்புக்கொள்ள வழிவகுத்தது. அவருடைய வார்த்தைகள் கிருபைப் பொருந்தினதாகவும், தெய்வீக ஞானத்தால் நிரம்பியதாகவும் இருந்தன. * நமது உரையாடல்கள் கிருபையும், சாரமும் நிறைந்திருக்கும்போது மக்களின் வாழ்க்கையை அவைகள் ஆழமாகப் பாதிக்கும் என்பதை இந்தக் கதை நமக்கு நினைவூட்டுகிறது.* குடும்பத்தில் நடக்கும் உரையாடல்களிலும் இது முக்கியமானது.* நமது இரக்கமான‌ வார்த்தைகளால், இருதயங்கள் மறுரூபமடைகின்றன, மனபாரங்கள் மாறுகின்றன, மேலும் உறவுகள் வலுப்பெறுகின்றன.* இரக்கமுள்ளவர்களாய் இருங்கள், இயேசுவின் நறுமணத்தைப் பரப்புங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் உரையாடல்களில் இரக்கம் காட்டி, உமது நறுமணத்தை மற்றவர்களுக்குப் பரப்ப எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக. கொலோசெயர் 4:6 * நமது உரையாடல்களுக்கு உறவுகளை வளர்க்கும் அல்லது அழிக்கும் ஆற்றல் உண்டு.* அவைகள், மக்கள் கர்த்தர் மீது நம்பிக்கை வைக்கக்கூடியதாய் மாறலாம் அல்லது மக்களை இயேசுவிடம் இருந்து பிரிக்கலாம். * நமது உரையாடல்களில் கிருபையும், சாரத்தோடும் இணைந்திருக்க வேண்டியதன் அவசியத்தை மேற்கண்ட வசனம் கூறுகிறது.* ஒரு பிரபலமான பழமொழியின்படி, “வெறுமையான பாத்திரங்கள் அதிக சத்தம் எழுப்புகின்றன”.* ஒரு சில வார்த்தைகள் பேசினாலும், அன்பாகவும், தேவையான கருத்துடனும், சாரத்துடனும் பேசுவதில் கவனம் செலுத்துங்கள். சமாரியா கிணற்றினருகே இயேசுவுக்கும் சமாரியப் பெண்ணுக்கும் இடையிலான சந்திப்பு, கிருபையுடன் கூடிய உரையாடல்களின் தெளிவான உதாரணத்தைக் காட்டுகிறது. சமூக விதிமுறைகள் மற்றும் வேறுபாடுகள் இருந்தபோதிலும், இயேசு அவளை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தினார். அவர் அவளது வாழ்க்கையைப் பற்றி கனிவாகப் பேசினார், அவளுடைய கடந்த காலத்தைக் குறித்து குற்றப்படுத்தாமல் எடுத்துக் கூறினார். இயேசுவின் வார்த்தைகள் அவளுடைய இதயத்தை ஆழமாகத் தொட்டது, அவரை மேசியாவாக ஒப்புக்கொள்ள வழிவகுத்தது. அவருடைய வார்த்தைகள் கிருபைப் பொருந்தினதாகவும், தெய்வீக ஞானத்தால் நிரம்பியதாகவும் இருந்தன. * நமது உரையாடல்கள் கிருபையும், சாரமும் நிறைந்திருக்கும்போது மக்களின் வாழ்க்கையை அவைகள் ஆழமாகப் பாதிக்கும் என்பதை இந்தக் கதை நமக்கு நினைவூட்டுகிறது.* குடும்பத்தில் நடக்கும் உரையாடல்களிலும் இது முக்கியமானது.* நமது இரக்கமான‌ வார்த்தைகளால், இருதயங்கள் மறுரூபமடைகின்றன, மனபாரங்கள் மாறுகின்றன, மேலும் உறவுகள் வலுப்பெறுகின்றன.* இரக்கமுள்ளவர்களாய் இருங்கள், இயேசுவின் நறுமணத்தைப் பரப்புங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் உரையாடல்களில் இரக்கம் காட்டி, உமது நறுமணத்தை மற்றவர்களுக்குப் பரப்ப எனக்கு உதவி செய்யும். ஆமென்.