← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.

“ஏப்ரல் 29, 2023 சனிக்கிழமை இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். பிலிப்பியர் 4:4. * இன்றைய சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இல்லாமல் இருக்கலாம்.* உலகத்தில் வரும் செய்திகள், மற்றும் அமைதியற்ற சூழ்நிலைகள் உங்களை சோர்வுக்குள்ளாக்கலாம்.* எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது பயமாக இருக்கலாம்.* உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கலாம், அவற்றில் பெரும்பாலானவை அச்சுறுத்தலாகவும், உங்களுக்கு விரோதமாகவும் இருக்கலாம்.* உண்மையில், நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் ஊக்கமளிப்பதாக இல்லை. * எனினும், கர்த்தர் உங்கள் எதிர்காலத்தை முன்னரே தீர்மானித்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவருடைய திட்டங்கள் நம்பிக்கைக்குரியவை.* அவருடைய எண்ணங்களும் வழிகளும் உங்களுடைய சிந்தனையை விட உயர்ந்தவை.* உங்கள் சொந்த புரிதலை நம்பாதீர்கள்.* உண்மையான நம்பிக்கை என்பது பாதகமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் கர்த்தரை நம்புவதாகும்.* எதிர்காலத்தின் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு இல்லாதபோது, பயந்து, மனச்சோர்வடைந்திருப்பதில் அர்த்தமில்லை.* உலக சவால்கள் மற்றும் சிரமங்கள் தவிர்க்க முடியாதவை, அவை வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். * பயத்துடன் சூழ்நிலைகளைப் பார்க்காதீர்தள்.* மாறாக, எப்பொழுதும் இயேசுவையே பார்க்க உங்களைப் பயிற்றுவியுங்கள்.* உங்களுக்குப் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் உங்களைத் தக்கவைக்கும் மகிழ்ச்சியின் தருணங்களைத் தேடுவதன் மூலம் உங்கள் எதிர்மறை உணர்ச்சிகளை நிர்வகிக்க கற்றுக்கொள்ளுங்கள்.* மகிழ்ச்சியின் நிலையான ஆதாரமாக இயேசு இருக்கிறார்.* அவருடைய மகிழ்ச்சி உங்கள் வலிமையின் மிக முக்கியமான ஆதாரமாக இருக்கும்.* கர்த்தருடன் எப்பொழுதும் நெருக்கமான உறவைப் பேணுங்கள்.* அவருடைய சமூகமும், வார்த்தைகளும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.* ஆம்! கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஏப்ரல் 29, 2023 சனிக்கிழமை இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். பிலிப்பியர் 4:4. * இன்றைய சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இல்லாமல் இருக்கலாம்.* உலகத்தில் வரும் செய்திகள், மற்றும் அமைதியற்ற சூழ்நிலைகள் உங்களை சோர்வுக்குள்ளாக்கலாம்.* எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது பயமாக இருக்கலாம்.* உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கலாம், அவற்றில் பெரும்பாலானவை அச்சுறுத்தலாகவும், உங்களுக்கு விரோதமாகவும் இருக்கலாம்.* உண்மையில், நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் ஊக்கமளிப்பதாக இல்லை. * எனினும், கர்த்தர் உங்கள் எதிர்காலத்தை முன்னரே தீர்மானித்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவருடைய திட்டங்கள் நம்பிக்கைக்குரியவை.* அவருடைய எண்ணங்களும் வழிகளும் உங்களுடைய சிந்தனையை விட உயர்ந்தவை.* உங்கள் சொந்த புரிதலை நம்பாதீர்கள்.* உண்மையான நம்பிக்கை என்பது பாதகமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் கர்த்தரை நம்புவதாகும்.* எதிர்காலத்தின் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு இல்லாதபோது, பயந்து, மனச்சோர்வடைந்திருப்பதில் அர்த்தமில்லை.* உலக சவால்கள் மற்றும் சிரமங்கள் தவிர்க்க முடியாதவை, அவை வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். * பயத்துடன் சூழ்நிலைகளைப் பார்க்காதீர்தள்.* மாறாக, எப்பொழுதும் இயேசுவையே பார்க்க உங்களைப் பயிற்றுவியுங்கள்.* உங்களுக்குப் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் உங்களைத் தக்கவைக்கும் மகிழ்ச்சியின் தருணங்களைத் தேடுவதன் மூலம் உங்கள் எதிர்மறை உணர்ச்சிகளை நிர்வகிக்க கற்றுக்கொள்ளுங்கள்.* மகிழ்ச்சியின் நிலையான ஆதாரமாக இயேசு இருக்கிறார்.* அவருடைய மகிழ்ச்சி உங்கள் வலிமையின் மிக முக்கியமான ஆதாரமாக இருக்கும்.* கர்த்தருடன் எப்பொழுதும் நெருக்கமான உறவைப் பேணுங்கள்.* அவருடைய சமூகமும், வார்த்தைகளும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.* ஆம்! கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.