← செய்திகளுக்குத் திரும்பு
உத்தமமாய் நடப்பதன் மூலம் பத்திரமாய் இருப்பீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

உத்தமமாய் நடப்பதன் மூலம் பத்திரமாய் இருப்பீர்கள்.

“செவ்வாய், 12 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. எரேமியா 29:11 நீண்ட காலத்திற்கு முன்பு, இஸ்ரவேலர்கள் நிச்சயமற்ற நிலையை சந்தித்தக் காலத்தில், எரேமியா என்ற ஒரு தீர்க்கதரிசி வாழ்ந்து வந்தார். கடவுள் எரேமியாவிடம் பேசி, எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையின் செய்தியைக் கொடுத்தார். கர்த்தருடைய பிள்ளைகள் சிறைபிடிக்கப்பட்டு கஷ்டங்களை அனுபவித்து வந்தனர் என்றாலும், கர்த்தர் அவர்களை சிறையிருப்பிலிருந்துத் திருப்பி, அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் கொடுப்பதாகவும் வாக்குத்தத்தம் அளித்தார். இந்த வாக்குத்தத்தம் கர்த்தரை நம்பிய அனைவருக்கும் சொந்தமானது. எரேமியா இந்த செய்தியை மக்களுடன் பகிர்ந்து கொண்டு, கடினமான நேரத்திலும் கூட கர்த்தருக்கு ஒரு நோக்கமும் திட்டமும் இருக்கிறது என்பதை அவர்களுக்கு நினைவூட்டினார். இது நம்பிக்கையின் செய்தியாக இருந்தது, கர்த்தர் அவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார் என்பதை அனைவருக்கும் நினைவூட்டியது. பின்னர், கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தை நிறைவேற்றி இஸ்ரவேல் தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பினார். * இன்று, இந்த வாக்குத்தத்தை நாமும் பற்றிக்கொள்ளலாம்.* கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்காக திட்டங்களை வகுத்ததைப் போலவே, அவர் உங்களுக்காகவும் திட்டங்களை வைத்திருக்கிறார்.* உங்கள் தற்போதைய நிலைமை எவ்வளவு பயங்கரமாக இருந்தாலும், உங்களுக்கான அவருடைய திட்டங்கள் நம்பிக்கையாலும் பிரகாசமான எதிர்காலத்தாலும் நிரப்பப்பட்டுள்ளன.* ஆகவே, உங்கள் நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள், அவருடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொண்டு, அவருடைய வழிகளில் தொடர்ந்து நடந்துச் செல்லுங்கள். பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. நீங்கள் நிச்சயமற்றதாக உணர்ந்த அல்லது சவால்களை எதிர்கொண்ட தருணங்களை உங்களால் நினைவுகூர முடியுமா?2. எரேமியாவின் கதையைப் பற்றி சிந்தித்துப் பார்த்து, கர்த்தர் உங்களுக்கு செழிப்பான மற்றும் நம்பிக்கையான எதிர்காலத்தை வைத்திருக்கிறார் என்பதை அறிந்து, உங்கள் வாழ்க்கைக்கான கர்த்தரின் திட்டங்களை நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தற்போதைய சூழ்நிலைகள் சவாலானதாக இருந்தாலும், உம்மையும் என் எதிர்காலத்திற்கான உமது திட்டங்களையும் நம்புவதற்கு எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 12 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. எரேமியா 29:11 நீண்ட காலத்திற்கு முன்பு, இஸ்ரவேலர்கள் நிச்சயமற்ற நிலையை சந்தித்தக் காலத்தில், எரேமியா என்ற ஒரு தீர்க்கதரிசி வாழ்ந்து வந்தார். கடவுள் எரேமியாவிடம் பேசி, எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையின் செய்தியைக் கொடுத்தார். கர்த்தருடைய பிள்ளைகள் சிறைபிடிக்கப்பட்டு கஷ்டங்களை அனுபவித்து வந்தனர் என்றாலும், கர்த்தர் அவர்களை சிறையிருப்பிலிருந்துத் திருப்பி, அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் கொடுப்பதாகவும் வாக்குத்தத்தம் அளித்தார். இந்த வாக்குத்தத்தம் கர்த்தரை நம்பிய அனைவருக்கும் சொந்தமானது. எரேமியா இந்த செய்தியை மக்களுடன் பகிர்ந்து கொண்டு, கடினமான நேரத்திலும் கூட கர்த்தருக்கு ஒரு நோக்கமும் திட்டமும் இருக்கிறது என்பதை அவர்களுக்கு நினைவூட்டினார். இது நம்பிக்கையின் செய்தியாக இருந்தது, கர்த்தர் அவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார் என்பதை அனைவருக்கும் நினைவூட்டியது. பின்னர், கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தை நிறைவேற்றி இஸ்ரவேல் தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பினார். * இன்று, இந்த வாக்குத்தத்தை நாமும் பற்றிக்கொள்ளலாம்.* கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்காக திட்டங்களை வகுத்ததைப் போலவே, அவர் உங்களுக்காகவும் திட்டங்களை வைத்திருக்கிறார்.* உங்கள் தற்போதைய நிலைமை எவ்வளவு பயங்கரமாக இருந்தாலும், உங்களுக்கான அவருடைய திட்டங்கள் நம்பிக்கையாலும் பிரகாசமான எதிர்காலத்தாலும் நிரப்பப்பட்டுள்ளன.* ஆகவே, உங்கள் நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள், அவருடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொண்டு, அவருடைய வழிகளில் தொடர்ந்து நடந்துச் செல்லுங்கள். பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. நீங்கள் நிச்சயமற்றதாக உணர்ந்த அல்லது சவால்களை எதிர்கொண்ட தருணங்களை உங்களால் நினைவுகூர முடியுமா?2. எரேமியாவின் கதையைப் பற்றி சிந்தித்துப் பார்த்து, கர்த்தர் உங்களுக்கு செழிப்பான மற்றும் நம்பிக்கையான எதிர்காலத்தை வைத்திருக்கிறார் என்பதை அறிந்து, உங்கள் வாழ்க்கைக்கான கர்த்தரின் திட்டங்களை நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தற்போதைய சூழ்நிலைகள் சவாலானதாக இருந்தாலும், உம்மையும் என் எதிர்காலத்திற்கான உமது திட்டங்களையும் நம்புவதற்கு எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.