← செய்திகளுக்குத் திரும்பு
நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்.

“ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப் பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். ஏசாயா 1:17 இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் மதத் தலைவர்கள் ஒரு பெண்ணை அவர் முன் கொண்டு வந்தனர். அவள் விபச்சாரத்தில் ஈடுபட்டு பிடிபட்டவள், அந்தக் காலத்தில் நாட்டின் சட்டப்படி அவள் கல்லெறிந்துக் கொல்லப்பட வேண்டும். இந்த தண்டனையை நிறைவேற்ற வேண்டுமா என்று இயேசுவிடம் கேட்டு, அவரை சிக்க வைக்க முயன்றனர். அவர்களுடைய நோக்கத்தை அறிந்த இயேசு, ஞானத்துடன் பதிலளித்தார். உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார். பின்னர் குனிந்து தரையில் எழுதத் தொடங்கினார். அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். அந்த ஸ்திரீ தனியே நின்றுக்கொண்டிருந்தாள். இரக்கம் நிறைந்த இயேசு, அந்தப் பெண்ணிடம், "ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா?" என்று கேட்டார். இல்லை, ஆண்டவரே என்று அவள் பதிலளித்தபோது, அவர், "நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே " என்றார். நன்மையானதைச் செய்து, இரக்கத்துடனும் பணிவுடனும் நீதியைத் தேடுவதன் முக்கியத்துவத்தை இந்தக் கதை நமக்குக் கற்பிக்கிறது. பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. உங்கள் சொந்த வாழ்க்கையில் உங்கள் செயல்கள் அல்லது முடிவுகளில் நீதி மற்றும் இரக்கத்தை சேர்ந்து நிறைவேற்ற வேண்டியிருந்த தருணங்களை உங்களால் நினைவுகூர முடியுமா?2. மற்றவர்களுடனான உங்கள் தொடர்புகளில் இரக்கத்துடனும் பணிவுடனும் நீதிக்குரிய கொள்கைகளை நீங்கள் எவ்வாறு செயல்படுத்தலாம்? # மக்களை நியாயந்தீர்க்கவோ, கண்டிக்கவோ அவசரப்பட வேண்டாம்.# மாறாக, சூழ்நிலைகளை சரியாகப் பகுப்பாய்வு செய்து நன்மையானதைச் செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நீதியோடு சரியானதைச் செய்வதற்கு எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப் பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். ஏசாயா 1:17 இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் மதத் தலைவர்கள் ஒரு பெண்ணை அவர் முன் கொண்டு வந்தனர். அவள் விபச்சாரத்தில் ஈடுபட்டு பிடிபட்டவள், அந்தக் காலத்தில் நாட்டின் சட்டப்படி அவள் கல்லெறிந்துக் கொல்லப்பட வேண்டும். இந்த தண்டனையை நிறைவேற்ற வேண்டுமா என்று இயேசுவிடம் கேட்டு, அவரை சிக்க வைக்க முயன்றனர். அவர்களுடைய நோக்கத்தை அறிந்த இயேசு, ஞானத்துடன் பதிலளித்தார். உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார். பின்னர் குனிந்து தரையில் எழுதத் தொடங்கினார். அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். அந்த ஸ்திரீ தனியே நின்றுக்கொண்டிருந்தாள். இரக்கம் நிறைந்த இயேசு, அந்தப் பெண்ணிடம், “ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா?” என்று கேட்டார். இல்லை, ஆண்டவரே என்று அவள் பதிலளித்தபோது, அவர், “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே “ என்றார். நன்மையானதைச் செய்து, இரக்கத்துடனும் பணிவுடனும் நீதியைத் தேடுவதன் முக்கியத்துவத்தை இந்தக் கதை நமக்குக் கற்பிக்கிறது. பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. உங்கள் சொந்த வாழ்க்கையில் உங்கள் செயல்கள் அல்லது முடிவுகளில் நீதி மற்றும் இரக்கத்தை சேர்ந்து நிறைவேற்ற வேண்டியிருந்த தருணங்களை உங்களால் நினைவுகூர முடியுமா?2. மற்றவர்களுடனான உங்கள் தொடர்புகளில் இரக்கத்துடனும் பணிவுடனும் நீதிக்குரிய கொள்கைகளை நீங்கள் எவ்வாறு செயல்படுத்தலாம்? # மக்களை நியாயந்தீர்க்கவோ, கண்டிக்கவோ அவசரப்பட வேண்டாம்.# மாறாக, சூழ்நிலைகளை சரியாகப் பகுப்பாய்வு செய்து நன்மையானதைச் செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நீதியோடு சரியானதைச் செய்வதற்கு எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.