← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் மனதை கட்டுப்படுத்துவது யார்?
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் மனதை கட்டுப்படுத்துவது யார்?

“வெள்ளி, 24 மே 2024இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.ரோமர் 8:6 நம் அனைவருக்கும் ஆசைகள் உள்ளன. அவை வெளிப்புறத் தாக்கங்கள் அல்லது உள்ளார்ந்த தேவைகளினால் உருவாகலாம். இந்த ஆசைகள், நம்முடைய தீர்மானங்களுக்கும், செயல்களுக்கும் வழிவகுக்கின்றன. உலகத்தனமான அல்லது பாவத் தூண்டல்களால் உந்தப்படும் ஆசைகள் நமது நேர்மையான காரியங்களுக்கு மாறாக நம்மை இழுத்து செல்கின்றன. ஆனால் நம்முடைய ஆசைகள் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்படுமானால், அது சமாதானமாயிருக்கும். எனவே, கேள்வி என்னவென்றால்:உங்கள் வாழ்வின் எஜமானன் யார்?உங்கள் உணர்ச்சிகள், இலட்சியங்கள் மற்றும் எதிர்காலத்திற்கான திட்டங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதிகளிலும் இயேசுவே ஆண்டவராகவும், இரட்சகராகவும் இருக்கட்டும். உங்கள் வாழ்க்கையின் மீது அவருடைய கர்த்தத்துவத்தை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் அவருடைய வழிகாட்டலுக்கு ஒப்புக்கொடுங்கள். அப்படிச் செய்வதன் மூலம், நீங்கள் நிச்சயமாய் உங்கள் வாழ்நாள் முழுவதும் சமாதானத்தையும், செழிப்பையும் அனுபவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் உமக்குக் கீழ்ப்படிந்திருக்க எனக்கு உதவி செய்யும். பரிசுத்த ஆவியானவரே, நீர் என்னை வழிநடத்தி, என் மனதின் ஆசைகளைக் கட்டுப்படுத்துவீராக. ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளி, 24 மே 2024இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.ரோமர் 8:6 நம் அனைவருக்கும் ஆசைகள் உள்ளன. அவை வெளிப்புறத் தாக்கங்கள் அல்லது உள்ளார்ந்த தேவைகளினால் உருவாகலாம். இந்த ஆசைகள், நம்முடைய தீர்மானங்களுக்கும், செயல்களுக்கும் வழிவகுக்கின்றன. உலகத்தனமான அல்லது பாவத் தூண்டல்களால் உந்தப்படும் ஆசைகள் நமது நேர்மையான காரியங்களுக்கு மாறாக நம்மை இழுத்து செல்கின்றன. ஆனால் நம்முடைய ஆசைகள் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்படுமானால், அது சமாதானமாயிருக்கும். எனவே, கேள்வி என்னவென்றால்:உங்கள் வாழ்வின் எஜமானன் யார்?உங்கள் உணர்ச்சிகள், இலட்சியங்கள் மற்றும் எதிர்காலத்திற்கான திட்டங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதிகளிலும் இயேசுவே ஆண்டவராகவும், இரட்சகராகவும் இருக்கட்டும். உங்கள் வாழ்க்கையின் மீது அவருடைய கர்த்தத்துவத்தை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் அவருடைய வழிகாட்டலுக்கு ஒப்புக்கொடுங்கள். அப்படிச் செய்வதன் மூலம், நீங்கள் நிச்சயமாய் உங்கள் வாழ்நாள் முழுவதும் சமாதானத்தையும், செழிப்பையும் அனுபவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் உமக்குக் கீழ்ப்படிந்திருக்க எனக்கு உதவி செய்யும். பரிசுத்த ஆவியானவரே, நீர் என்னை வழிநடத்தி, என் மனதின் ஆசைகளைக் கட்டுப்படுத்துவீராக. ஆமென்.