← செய்திகளுக்குத் திரும்பு
நம் சொந்த செயல்களுக்கு நாம் அனைவரும் பொறுப்பாளிகள்.
படத்தைப் பதிவிறக்கு

நம் சொந்த செயல்களுக்கு நாம் அனைவரும் பொறுப்பாளிகள்.

“வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஒவ்வொருவனும் தன் பொறுப்புகளை ஒப்புக்கொள்ள வேண்டும்.கலாத்தியர் 6:5 (TERV) பொறுப்புக்கூறல் என்பது கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சமாகும். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது காணபடுவதில்லை. முதிர்வயதை அடைந்துவிட்டதால் மற்றும்/அல்லது ஒரு குடும்பம் இருப்பதால், தாங்கள் இனி யாருக்கும் பதிலளிக்கத்தேவை இல்லை என்று மக்கள் நம்புகிறார்கள். இந்த அகங்கார உலகக் கண்ணோட்டம் சமூகத்திலும் ஊழியத்திலும் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. வேதாகமத்தில், நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கடவுளிடம் கணக்குக் கொடுக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. அப்படியானால், மற்ற வளங்களை குறித்து எவ்வளவு அதிகம் பொறுப்பாக இருக்கவேண்டும்? அப்போஸ்தலனாகிய பவுல் தனது வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பொறுப்புக்கூறலை முன்மாதிரியாகக் கொண்டு மற்றவர்களையும் அதைச் செய்ய தூண்டினார். இயேசு தம் தந்தைக்கு பதிலளிக்கக்கூடியவராக இருந்தார் மேலும் தம் தந்தைக்கு தெரியாமல் எதையும் பேசுவதில்லை அல்லது செய்வதில்லை என்று கூறினார்.பொறுப்புக்கூறல் பற்றி இதைவிட வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்? 1. தனிப்பட்ட குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவிக்கு நீங்கள் எவ்வளவு பொறுப்பாக இருக்கிறீர்கள்?2. உங்களின் வேலை, வியாபாரம் அல்லது அன்றாட நடவடிக்கைகளின் அடிப்படையில், உங்கள் அண்டை வீட்டாருக்கும் சக ஊழியர்களுக்கும் நீங்கள் எவ்வளவு பொறுப்பாக இருக்கிறீர்கள்? # உங்களுக்குச் சொந்தமான அனைத்திலும், நீங்கள் செய்யும் அனைத்திலும், நீங்கள் பொறுப்பேற்றுள்ள அனைத்திலும் பொறுப்புக்கூறல் நடைமுறையை வளர்த்துக் கொள்ளுங்கள்.# பொறுப்புக்கூறல் வெளிப்படைத்தன்மை, நம்பிக்கையை வளர்ப்பது மற்றும் மற்றவர்களுடன் நேர்மறை உறவுகளை ஏற்படுத்துகிறது.# இந்த முக்கியமான குணத்தில் கவனம் செலுத்துங்கள்; அப்போது நீங்கள் இயேசுவுக்கு ஒரு சிறந்த சாட்சியாக இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் வைத்திருக்கும், செய்கின்ற, மற்றும் நிர்வகிக்கும் அனைத்திற்கும் நல்ல பொறுப்புக்கூறும் நபராக வாழ எனக்கு உதவும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஒவ்வொருவனும் தன் பொறுப்புகளை ஒப்புக்கொள்ள வேண்டும்.கலாத்தியர் 6:5 (TERV) பொறுப்புக்கூறல் என்பது கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சமாகும். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது காணபடுவதில்லை. முதிர்வயதை அடைந்துவிட்டதால் மற்றும்/அல்லது ஒரு குடும்பம் இருப்பதால், தாங்கள் இனி யாருக்கும் பதிலளிக்கத்தேவை இல்லை என்று மக்கள் நம்புகிறார்கள். இந்த அகங்கார உலகக் கண்ணோட்டம் சமூகத்திலும் ஊழியத்திலும் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. வேதாகமத்தில், நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கடவுளிடம் கணக்குக் கொடுக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. அப்படியானால், மற்ற வளங்களை குறித்து எவ்வளவு அதிகம் பொறுப்பாக இருக்கவேண்டும்? அப்போஸ்தலனாகிய பவுல் தனது வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பொறுப்புக்கூறலை முன்மாதிரியாகக் கொண்டு மற்றவர்களையும் அதைச் செய்ய தூண்டினார். இயேசு தம் தந்தைக்கு பதிலளிக்கக்கூடியவராக இருந்தார் மேலும் தம் தந்தைக்கு தெரியாமல் எதையும் பேசுவதில்லை அல்லது செய்வதில்லை என்று கூறினார்.பொறுப்புக்கூறல் பற்றி இதைவிட வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்? 1. தனிப்பட்ட குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவிக்கு நீங்கள் எவ்வளவு பொறுப்பாக இருக்கிறீர்கள்?2. உங்களின் வேலை, வியாபாரம் அல்லது அன்றாட நடவடிக்கைகளின் அடிப்படையில், உங்கள் அண்டை வீட்டாருக்கும் சக ஊழியர்களுக்கும் நீங்கள் எவ்வளவு பொறுப்பாக இருக்கிறீர்கள்? # உங்களுக்குச் சொந்தமான அனைத்திலும், நீங்கள் செய்யும் அனைத்திலும், நீங்கள் பொறுப்பேற்றுள்ள அனைத்திலும் பொறுப்புக்கூறல் நடைமுறையை வளர்த்துக் கொள்ளுங்கள்.# பொறுப்புக்கூறல் வெளிப்படைத்தன்மை, நம்பிக்கையை வளர்ப்பது மற்றும் மற்றவர்களுடன் நேர்மறை உறவுகளை ஏற்படுத்துகிறது.# இந்த முக்கியமான குணத்தில் கவனம் செலுத்துங்கள்; அப்போது நீங்கள் இயேசுவுக்கு ஒரு சிறந்த சாட்சியாக இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் வைத்திருக்கும், செய்கின்ற, மற்றும் நிர்வகிக்கும் அனைத்திற்கும் நல்ல பொறுப்புக்கூறும் நபராக வாழ எனக்கு உதவும். ஆமென்.