செவ்வாய், 19 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள். யாக்கோபு 1:19 வேதாகமத்தில் பார்க்கும்போது, மோசே மக்கள் மீது அனுதாபத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தினார். வனாந்திர பயணத்தில், மோசே தனது மக்களின் தேவைகள், பிரச்சனைகள் மற்றும் போராட்டங்களை நேரடியாகப் புரிந்து கொள்ள விரும்பினார். ஆகவே, காலை முதல் மாலை வரை மக்களின் பிரச்சினைகளைக் கேட்பதற்கும் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கும் அமர்ந்திருப்பார். இது சரீரத்தை அதிக இளைப்படைய பண்ணும். இதைக் கண்ட மோசேயின் மாமனார், தலைவர்களை தெரிந்தெடுத்து, மக்களின் புகார்களைத் தீர்க்கும் அமைப்பை உருவாக்குமாறு மோசேக்கு அறிவுரை கூறினார். மோசே தனது மாமனாரின் அறிவுரைகளை கேட்டு, தலைவர்களையும் குறைத் தீர்க்கும் அமைப்பையும் உருவாக்கினார். மோசேயின் அணுகுமுறை மனத்தாழ்மையையும், அவர் வழிநடத்திய மக்களின் நலனில் உண்மையான அக்கறையையும் வெளிப்படுத்தியது. தலைமை என்பது அறிவுரைகளை வழங்குவதை விட சமூகத்தின் தேவைகளையும், கஷ்டங்களையும் புரிந்து செயல்பட வேண்டும் என்று அறிந்துக் கொண்டார். அவர் நல்ல ஆலோசனைகளைக் கேட்டு செயல்படத் தயாராக இருந்தார். பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. உங்கள் தலைமைத்துவத் தன்மையில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில், நீங்கள் தொடர்புகொள்பவர்களின் கவலைகள் மற்றும் தேவைகளைக் கேட்பதில் நீங்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள்? 2. உங்கள் தலைமைத்துவத் தன்மை மற்றும் உத்திகள் குறித்து மற்றவர்களின் ஆலோசனையை நீங்கள் கேட்கிறீர்களா? # மற்றவர்களின் பிரச்சனைகளில் அக்கறைக் காட்டுங்கள்.# நம்பகமான இடங்களிலிருந்து நல்ல அறிவுரைகளைக் கேட்கும் அளவுக்கு மனத்தாழ்மையுடன் இருங்கள்.# அப்போது, நீங்கள் தடுமாற மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னைச் சுற்றியுள்ளவர்களின் கவலைகளையும், என் நலம் விரும்புபவர்களின் தேவைகளையும் அறிந்துக் கொள்பவனா(ளா)க இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும்,...
“டவர்கள். யாக்கோபு 1:19 வேதாகமத்தில் பார்க்கும்போது, மோசே மக்கள் மீது அனுதாபத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தினார். வனாந்திர பயணத்தில், மோசே தனது மக்களின் தேவைகள், பிரச்சனைகள் மற்றும் போராட்டங்களை நேரடியாகப் புரிந்து கொள்ள விரும்பினார். ஆகவே, காலை முதல் மாலை வரை மக்களின் பிரச்சினைகளைக் கேட்பதற்கும் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கும் அமர்ந்திருப்பார். இது சரீரத்தை அதிக இளைப்படைய பண்ணும். இதைக் கண்ட மோசேயின் மாமனார், தலைவர்களை தெரிந்தெடுத்து, மக்களின் புகார்களைத் தீர்க்கும் அமைப்பை உருவாக்குமாறு மோசேக்கு அறிவுரை கூறினார். மோசே தனது மாமனாரின் அறிவுரைகளை கேட்டு, தலைவர்களையும் குறைத் தீர்க்கும் அமைப்பையும் உருவாக்கினார். மோசேயின் அணுகுமுறை மனத்தாழ்மையையும், அவர் வழிநடத்திய மக்களின் நலனில் உண்மையான அக்கறையையும் வெளிப்படுத்தியது. தலைமை என்பது அறிவுரைகளை வழங்குவதை விட சமூகத்தின் தேவைகளையும், கஷ்டங்களையும் புரிந்து செயல்பட வேண்டும் என்று அறிந்துக் கொண்டார். அவர் நல்ல ஆலோசனைகளைக் கேட்டு செயல்படத் தயாராக இருந்தார். பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. உங்கள் தலைமைத்துவத் தன்மையில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில், நீங்கள் தொடர்புகொள்பவர்களின் கவலைகள் மற்றும் தேவைகளைக் கேட்பதில் நீங்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள்? 2. உங்கள் தலைமைத்துவத் தன்மை மற்றும் உத்திகள் குறித்து மற்றவர்களின் ஆலோசனையை நீங்கள் கேட்கிறீர்களா? # மற்றவர்களின் பிரச்சனைகளில் அக்கறைக் காட்டுங்கள்.# நம்பகமான இடங்களிலிருந்து நல்ல அறிவுரைகளைக் கேட்கும் அளவுக்கு மனத்தாழ்மையுடன் இருங்கள்.# அப்போது, நீங்கள் தடுமாற மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னைச் சுற்றியுள்ளவர்களின் கவலைகளையும், என் நலம் விரும்புபவர்களின் தேவைகளையும் அறிந்துக் கொள்பவனா(ளா)க இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

