புதன்கிழமை, 20 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. யோவான் 15:12. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு விசாரணை நடந்துக்கொண்டிருந்த போது, அவருடைய சீஷன் பேதுரு பிரதான ஆசாரியனின் வேலைக்காரர்களுக்கு முன்பாக இயேசுவை மூன்று முறை மறுதலித்தார். இது இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இருதயத்தை உடைக்கும் சவாலான தருணம். இருப்பினும், இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த பிறகு, அழகான சம்பவம் ஒன்று நடந்தது. இயேசுவிடம் பக்தியாய் இருந்த பெண்கள் இயேசுவின் கல்லறைக்கு வாசனை திரவியங்களால் சுகந்தவர்க்கமிடும்படி வந்தனர். அவர்கள் கல்லறை காலியாக இருப்பதைக் கண்டார்கள், உள்ளே ஒரு தேவதூதன் இயேசு உயிர்த்தெழுந்தார் என்று அவர்களுக்கு அறிவித்தான். தூதன் சீஷர்களுக்கு ஒரு விசேஷ செய்தியை வைத்திருந்தான், மேலும் அவன் பேதுருவை அதில் தனியாகக் குறிப்பிட்டு, “நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள்” என்றான்பின்னர், கலிலேயா கடலின் அருகே, பேதுரு உட்பட தம் சீஷர்களுக்கு இயேசு காட்சியளித்தார். பேதுரு முன்பு மூன்று முறை இயேசுவை மறுதலித்ததுப் போலவே, அவர் பேதுருவிடம் “என்னை நேசிக்கிறாயா?” என்று மூன்று முறை கேட்டார். பேதுரு , இயேசுவை மற்றவர்களுக்கு முன்பாக மறுதலித்தான் என்பதற்காக இயேசு பேதுருவைக் கைவிடவில்லை. இந்த கதை அன்பு மற்றும் மன்னிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறது. நாம் தவறு செய்தாலும் அல்லது ஒருவரை மறுதலித்தாலும் கூட அன்பு உறவுகளை மீட்டெடுக்கும். இயேசு பேதுருவை மன்னித்து அவருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்தது போல் நாமும் இயேசுவின் அன்பை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும். தனிப்பட்ட பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தவறுகள் செய்யும் போது மன்னிப்பு மற்றும் அன்பை அனுபவித்திருக்கிறீர்களா? 2. இயேசுவின் மீது உங்கள் அன்பின் ஆழம் எவ்வாறு இருக்கிறது? அது உங்கள் செயல்களில் எவ்வாறு வெளிப்படுகிறது? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னை நேசிக்கிறது போல நான் மற்றவர்களை நேசிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
இயேசு உங்களை நேசித்தது போல் நீங்கள் ஒருவரையொருவர் நேசியுங்கள்.
“புதன்கிழமை, 20 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. யோவான் 15:12. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு விசாரணை நடந்துக்கொண்டிருந்த போது, அவருடைய சீஷன் பேதுரு பிரதான ஆசாரியனின் வேலைக்காரர்களுக்கு முன்பாக இயேசுவை மூன்று முறை மறுதலித்தார். இது இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இருதயத்தை உடைக்கும் சவாலான தருணம். இருப்பினும், இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த பிறகு, அழகான சம்பவம் ஒன்று நடந்தது. இயேசுவிடம் பக்தியாய் இருந்த பெண்கள் இயேசுவின் கல்லறைக்கு வாசனை திரவியங்களால் சுகந்தவர்க்கமிடும்படி வந்தனர். அவர்கள் கல்லறை காலியாக இருப்பதைக் கண்டார்கள், உள்ளே ஒரு தேவதூதன் இயேசு உயிர்த்தெழுந்தார் என்று அவர்களுக்கு அறிவித்தான். தூதன் சீஷர்களுக்கு ஒரு விசேஷ செய்தியை வைத்திருந்தான், மேலும் அவன் பேதுருவை அதில் தனியாகக் குறிப்பிட்டு, "நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள்" என்றான்பின்னர், கலிலேயா கடலின் அருகே, பேதுரு உட்பட தம் சீஷர்களுக்கு இயேசு காட்சியளித்தார். பேதுரு முன்பு மூன்று முறை இயேசுவை மறுதலித்ததுப் போலவே, அவர் பேதுருவிடம் "என்னை நேசிக்கிறாயா?" என்று மூன்று முறை கேட்டார். பேதுரு , இயேசுவை மற்றவர்களுக்கு முன்பாக மறுதலித்தான் என்பதற்காக இயேசு பேதுருவைக் கைவிடவில்லை. இந்த கதை அன்பு மற்றும் மன்னிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறது. நாம் தவறு செய்தாலும் அல்லது ஒருவரை மறுதலித்தாலும் கூட அன்பு உறவுகளை மீட்டெடுக்கும். இயேசு பேதுருவை மன்னித்து அவருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்தது போல் நாமும் இயேசுவின் அன்பை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும். தனிப்பட்ட பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தவறுகள் செய்யும் போது மன்னிப்பு மற்றும் அன்பை அனுபவித்திருக்கிறீர்களா? 2. இயேசுவின் மீது உங்கள் அன்பின் ஆழம் எவ்வாறு இருக்கிறது? அது உங்கள் செயல்களில் எவ்வாறு வெளிப்படுகிறது? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னை நேசிக்கிறது போல நான் மற்றவர்களை நேசிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

