ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். மத்தேயு 24:13 * நிலையாக சீராய் இருப்பது என்பது கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சமாகும்.* விசுவாச ஓட்டம் என்பது வேகம் நிறைந்த ஒரு போட்டி அல்ல, மாறாக விடாமுயற்சி மற்றும் சகிப்புத்தன்மையினால் நிறைந்த ஒரு தொடர் ஓட்டம் ஆகும். நிலையாக சீராய் இருப்பதற்கு ஒரு அழகான உதாரணத்தை தானியேலின் வாழ்க்கையில் காணலாம். பாபிலோன் யூதாவைக் கைப்பற்றியபோது, பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டவர்களில் தானியேலும் இருந்தார். அவருடைய சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டபோதும், ஆசைகளைத் தூண்டும் சோதனையின் நேரத்திலும், தானியல் தன் விசுவாசத்தில் உறுதியாக இருந்தார். ராஜாவின் போஜனம் மற்றும் திராட்சரசத்தால் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ள மறுத்து, தொடர்ந்து கர்த்தரைத் தேடினான். தன் வாழ்நாள் முழுவதும், தானியல் ஜெபம் செய்து அசைக்க முடியாத விசுவாசத்தை வெளிப்படுத்தினான். கர்த்தரின் ஞானத்தையும் வழிகாட்டுதலையும் தேடுவதில் அவனுடைய உறுதியான உறுதிப்பாடு, அவனுடைய சகாக்கள் மத்தியில் அவனை தனித்து நிற்கச் செய்தது, மேலும் அவன் ராஜாவுக்கு அடுத்தபடியாக பாபிலோனில் பிரதான அதிகாரியானான் * இயேசுவுடனான உங்கள் உறவும் விசுவாசமும் எவ்வளவு சீராக உள்ளது?* நீங்கள் நெருக்கடிகள் மற்றும் ஏமாற்றங்களை சந்திக்கும்போது எப்படி நடந்துகொள்கிறீர்கள்?* கர்த்தருடனான உங்கள் உறவின் நிலைத்தன்மையானது, உங்களுடைய ஆன்மீக வளர்ச்சிக்கும், அதில் முதிர்ச்சியடைவதற்கும் முக்கியமானது. * ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பந்தயத்தை முடிக்க விடாமுயற்சியுடன் தொடர்ந்து பயிற்சி பெறுவது போல, நீங்களும் ஜெபம், கர்த்தருடைய வார்த்தையைப் படிப்பது மற்றும் அவருடைய வழிகாட்டுதலைத் தேடுவதன் மூலம் உங்கள் ஆன்மீக வாழ்க்கையைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.* இயேசுவுடன் அனுதினமும் அமைதியான நேரத்தை அமைத்துக்கொள்வது, உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் இன்னும் சீராக இருக்க உதவிச் செய்யும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது அடிச்சுவடுகளைத் தொடர்ந்து பின்பற்றவும், நெருக்கடிகளுக்கு மத்தியில் அசைக்க முடியாத விசுவாசத்துடன் உறுதியாக இருக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
முடிவுபரியந்தம் நிலைநிற்பவர்களே இரட்சிக்கப்படுவார்கள்.
“ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். மத்தேயு 24:13 * நிலையாக சீராய் இருப்பது என்பது கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சமாகும்.* விசுவாச ஓட்டம் என்பது வேகம் நிறைந்த ஒரு போட்டி அல்ல, மாறாக விடாமுயற்சி மற்றும் சகிப்புத்தன்மையினால் நிறைந்த ஒரு தொடர் ஓட்டம் ஆகும். நிலையாக சீராய் இருப்பதற்கு ஒரு அழகான உதாரணத்தை தானியேலின் வாழ்க்கையில் காணலாம். பாபிலோன் யூதாவைக் கைப்பற்றியபோது, பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டவர்களில் தானியேலும் இருந்தார். அவருடைய சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டபோதும், ஆசைகளைத் தூண்டும் சோதனையின் நேரத்திலும், தானியல் தன் விசுவாசத்தில் உறுதியாக இருந்தார். ராஜாவின் போஜனம் மற்றும் திராட்சரசத்தால் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ள மறுத்து, தொடர்ந்து கர்த்தரைத் தேடினான். தன் வாழ்நாள் முழுவதும், தானியல் ஜெபம் செய்து அசைக்க முடியாத விசுவாசத்தை வெளிப்படுத்தினான். கர்த்தரின் ஞானத்தையும் வழிகாட்டுதலையும் தேடுவதில் அவனுடைய உறுதியான உறுதிப்பாடு, அவனுடைய சகாக்கள் மத்தியில் அவனை தனித்து நிற்கச் செய்தது, மேலும் அவன் ராஜாவுக்கு அடுத்தபடியாக பாபிலோனில் பிரதான அதிகாரியானான் * இயேசுவுடனான உங்கள் உறவும் விசுவாசமும் எவ்வளவு சீராக உள்ளது?* நீங்கள் நெருக்கடிகள் மற்றும் ஏமாற்றங்களை சந்திக்கும்போது எப்படி நடந்துகொள்கிறீர்கள்?* கர்த்தருடனான உங்கள் உறவின் நிலைத்தன்மையானது, உங்களுடைய ஆன்மீக வளர்ச்சிக்கும், அதில் முதிர்ச்சியடைவதற்கும் முக்கியமானது. * ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பந்தயத்தை முடிக்க விடாமுயற்சியுடன் தொடர்ந்து பயிற்சி பெறுவது போல, நீங்களும் ஜெபம், கர்த்தருடைய வார்த்தையைப் படிப்பது மற்றும் அவருடைய வழிகாட்டுதலைத் தேடுவதன் மூலம் உங்கள் ஆன்மீக வாழ்க்கையைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.* இயேசுவுடன் அனுதினமும் அமைதியான நேரத்தை அமைத்துக்கொள்வது, உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் இன்னும் சீராக இருக்க உதவிச் செய்யும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது அடிச்சுவடுகளைத் தொடர்ந்து பின்பற்றவும், நெருக்கடிகளுக்கு மத்தியில் அசைக்க முடியாத விசுவாசத்துடன் உறுதியாக இருக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

