இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் உனக்கு வீட்டை உண்டுபண்ணுவாரென்பதைக் கர்த்தர் உனக்கு அறிவிக்கிறார். 2 சாமுவேல் 7:11 * கர்த்தர் வீட்டைக் கட்டாவிட்டால், கட்டுபவர்களின் உழைப்பு வீண் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.* அமைதியான வாழ்க்கைக்கு வீடு இன்றியமையாதது, ஆனாலும் அது அதிக பிரயாசமிகுந்தது.* அவசரப்படாதீர்கள், உங்கள் வழியை மட்டும் நம்பாதீர்கள்.* அதிக தன்னம்பிக்கையினிமித்தம் கடவுளை அலட்சியம் செய்து விடாதீர்கள்.* மாறாக, உங்கள் திட்டங்களையும் தேவைகளையும் கடவுளிடம் ஒப்படைத்து அவருடைய வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள். * கடவுள் உங்களுக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் * அவர் உங்களை அமைதியான சூழல், பாதுகாப்பான வீடு மற்றும் இடையூறு இல்லாத சூழ்நிலையில் நிலைநிறுத்துவார், இதன் மூலம் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பணியைத் தொடரலாம். * உற்சாகப்படுங்கள். கடவுள் உங்களுக்காக ஒரு வீட்டைக் கட்டுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, ஆசீர்வதிக்கப்பட்ட வீட்டையும் அமைதியான வாழ்க்கையையும் எனக்கு தருவீராக. ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
கடவுள் உங்களுக்காக ஒரு வீட்டைக் கட்டுவார்.
“ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, ஆசீர்வதிக்கப்பட்ட வீட்டையும் அமைதியான வாழ்க்கையையும் எனக்கு தருவீராக. ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

