← செய்திகளுக்குத் திரும்பு
அசாதாரண வெற்றியை அடைய தகுதியானவர்களாக இருங்கள்
படத்தைப் பதிவிறக்கு

அசாதாரண வெற்றியை அடைய தகுதியானவர்களாக இருங்கள்

“திங்கள், 30 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனைநீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல்,ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.நீதிமொழிகள் 22:29 இன்றைய போட்டிச் சந்தையில் திறன் அவசியமானது. இருப்பினும், உண்மையான திறன், நமது திறமைகளில் இருந்தும் தேவனிடமிருந்து நாம் பெறும் ஞானம் மற்றும் ஆதரவிலிருந்தும் வருகிறது. நாம் தேவனின் உதவியை நாடும்போது, ​​வளர்ச்சியை ஊக்குவிக்கும் மனநிலையையும் கற்றல் மற்றும் முன்னேற்றத்திற்கான திறந்த மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்கிறோம். போராட்டம் அல்லது சுய சந்தேகம் ஏற்படும் காலங்களில், நாம் தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும், அவர் நம்முடன் கூட இருப்பதாகவும், விடாமுயற்சியுடன் செயல்பட நமக்குத் தேவையான ஊக்கத்தையும் பலத்தையும் தருவதாகவும் உறுதியளிக்கிறார். மேலும், தேவ நோக்கத்துடன் நமது திறமைகளை நாம் சீரமைக்கும்போது, ​​நமது சமூகங்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் பெருமளவில் நாம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். தேவனின் வழிகாட்டுதல் மற்றவர்களை மேம்படுத்தவும், ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட பொறுப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கவும் நமது திறமைகளைப் பயன்படுத்த நமக்கு உத்வேகமளிக்கும். இறுதியில், நமது முயற்சிகளின் மையத்தில் தேவனைக் கொண்டு, நாம் நமது இலக்குகளை அடைய முடியும். உலகில் அன்பு மற்றும் நம்பிக்கையின் கருவிகளாய் மாற முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இந்த உலகில் உமது நோக்கத்தை நிறைவேற்றுவதில் நான் திறமையானவனா(ளா)ய் மாற எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கள், 30 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனைநீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல்,ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.நீதிமொழிகள் 22:29 இன்றைய போட்டிச் சந்தையில் திறன் அவசியமானது. இருப்பினும், உண்மையான திறன், நமது திறமைகளில் இருந்தும் தேவனிடமிருந்து நாம் பெறும் ஞானம் மற்றும் ஆதரவிலிருந்தும் வருகிறது. நாம் தேவனின் உதவியை நாடும்போது, ​​வளர்ச்சியை ஊக்குவிக்கும் மனநிலையையும் கற்றல் மற்றும் முன்னேற்றத்திற்கான திறந்த மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்கிறோம். போராட்டம் அல்லது சுய சந்தேகம் ஏற்படும் காலங்களில், நாம் தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும், அவர் நம்முடன் கூட இருப்பதாகவும், விடாமுயற்சியுடன் செயல்பட நமக்குத் தேவையான ஊக்கத்தையும் பலத்தையும் தருவதாகவும் உறுதியளிக்கிறார். மேலும், தேவ நோக்கத்துடன் நமது திறமைகளை நாம் சீரமைக்கும்போது, ​​நமது சமூகங்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் பெருமளவில் நாம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். தேவனின் வழிகாட்டுதல் மற்றவர்களை மேம்படுத்தவும், ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட பொறுப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கவும் நமது திறமைகளைப் பயன்படுத்த நமக்கு உத்வேகமளிக்கும். இறுதியில், நமது முயற்சிகளின் மையத்தில் தேவனைக் கொண்டு, நாம் நமது இலக்குகளை அடைய முடியும். உலகில் அன்பு மற்றும் நம்பிக்கையின் கருவிகளாய் மாற முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இந்த உலகில் உமது நோக்கத்தை நிறைவேற்றுவதில் நான் திறமையானவனா(ளா)ய் மாற எனக்கு உதவி செய்யும். ஆமென்.