← செய்திகளுக்குத் திரும்பு
எல்லாவற்றையும் முதலில் தேவனிடம் சொல்லுங்கள்
படத்தைப் பதிவிறக்கு

எல்லாவற்றையும் முதலில் தேவனிடம் சொல்லுங்கள்

“வியாழன், 19 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பிலிப்பியர் 4:6 நமது கவலைகள் மற்றும் பிரச்சனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் பொதுவானது. பகிர்ந்து கொள்ளும் பழக்கம் வேறு, புலம்பல் வேறு. பகிர்வு என்ற சாக்குப்போக்கின் பேரில் நாம் அடிக்கடி மற்றவர்களிடம், குறிப்பாக மன அழுத்தத்தில் இருக்கும்போது புலம்ப ஆரம்பிக்கிறோம். புலம்புவது வாழ்க்கையில் கவலையையும் மன அழுத்தத்தையும் கூட்டுகிறது. - நீங்கள் இதே போன்ற சூழ்நிலைகளுடன் போராடுகிறீர்களா?- எந்த மனிதனிடமும் சொல்லும் முன் முதலில் தேவனிடம் சொல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.- தேவனிடம் உங்கள் இருதயத்தைத் திறந்து உங்களுக்குத் தேவையானதை அவரிடம் சொல்லத் தயங்காதீர்கள்.- சில நேரங்களில், நெருங்கிய நண்பர் கூட நம் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறார்கள்.- ஆனால் நம் உள்ளார்ந்த உணர்வுகளையும், ஏமாற்றங்களையும், எதிர்பார்ப்புகளையும் தேவனால் புரிந்து கொள்ள முடியும்.- உங்களைப் போலவே உங்களைப் புரிந்து கொள்ளக்கூடியவர் அவர் மட்டுமே.- மனிதனை நம்புவதை விட, தேவனை நம்புங்கள். எல்லாவற்றையும் அவரிடம் சொல்லுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களுக்குச் சொல்லும் முன் எல்லாவற்றையும் உம்மிடம் ஜெபத்தில் கொண்டு வரும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 19 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பிலிப்பியர் 4:6 நமது கவலைகள் மற்றும் பிரச்சனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் பொதுவானது. பகிர்ந்து கொள்ளும் பழக்கம் வேறு, புலம்பல் வேறு. பகிர்வு என்ற சாக்குப்போக்கின் பேரில் நாம் அடிக்கடி மற்றவர்களிடம், குறிப்பாக மன அழுத்தத்தில் இருக்கும்போது புலம்ப ஆரம்பிக்கிறோம். புலம்புவது வாழ்க்கையில் கவலையையும் மன அழுத்தத்தையும் கூட்டுகிறது. - நீங்கள் இதே போன்ற சூழ்நிலைகளுடன் போராடுகிறீர்களா?- எந்த மனிதனிடமும் சொல்லும் முன் முதலில் தேவனிடம் சொல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.- தேவனிடம் உங்கள் இருதயத்தைத் திறந்து உங்களுக்குத் தேவையானதை அவரிடம் சொல்லத் தயங்காதீர்கள்.- சில நேரங்களில், நெருங்கிய நண்பர் கூட நம் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறார்கள்.- ஆனால் நம் உள்ளார்ந்த உணர்வுகளையும், ஏமாற்றங்களையும், எதிர்பார்ப்புகளையும் தேவனால் புரிந்து கொள்ள முடியும்.- உங்களைப் போலவே உங்களைப் புரிந்து கொள்ளக்கூடியவர் அவர் மட்டுமே.- மனிதனை நம்புவதை விட, தேவனை நம்புங்கள். எல்லாவற்றையும் அவரிடம் சொல்லுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களுக்குச் சொல்லும் முன் எல்லாவற்றையும் உம்மிடம் ஜெபத்தில் கொண்டு வரும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்.