வியாழன், 27 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். பிலிப்பியர் 4:8B * நமது சிந்தனையானது, நமது மனப்பான்மையையும், உணர்ச்சிகளையும், நடத்தைகளையும் அதிகமாகப் பாதிக்கிறது.* ஒரு தோட்டக்காரன் பூக்களை கவனமாகப் பார்ப்பது போல, நாம் நம் எண்ணங்களை நல்ல முறையில் வளர்த்துக்கொள்ள வேண்டும்.* நேர்மையான உயர்ந்த எண்ணங்களில் உணர்வுபூர்வமாக கவனம் செலுத்துவதன் மூலம், ஆத்தும வளர்ச்சிக்கு உகந்த சூழலை வளர்த்துக் கொள்கிறோம். லூக்காவின் 10 ஆம் அதிகாரத்தில், இயேசு மார்த்தாள், மரியாளின் வீட்டிற்குச் செல்கிறார். மார்த்தாள் பற்பல வேலைகளில் மும்முரமாக இருந்தபோது, மரியாள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வசனத்தைக் கேட்க விரும்பினாள். மரியாள் தன் வேலைகளை புறக்கணிப்பதாகவோ அல்லது வேலையில் உதவிசெய்யாததாகவோ தோன்றினாலும், இயேசு அவள் செய்ததைப் பாராட்டி, “மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துக் கொண்டாள்” என்றார். இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்த மரியாளின் செயல், சிறந்த மற்றும் புகழப்படத்தக்க விஷயங்களில் கவனம் செலுத்தும் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. * மரியாளைப் போலவே, சிறந்த மற்றும் புகழப்படத்தக்கவற்றில் கவனம் செலுத்துவதைத் தேர்ந்தெடுப்பது உங்கள் வாழ்க்கைக்கு மிகுந்த நிறைவையும் அர்த்தத்தையும் அளிக்கும்.* இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து ஜெபத்தின் மூலமும், வசனத்தைப் படிப்பதின் மூலமும் நேரத்தை செலவிட்டு, அவருடைய ஞானத்தையும், சமாதானத்தையும், அன்பையும் பெற்றுக்கொள்ளுங்கள்.* உங்கள் இருதயத்திலும் மனதிலும் ஒரு அற்புதமான நிறைவை பெற்று அனுபவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எல்லாவற்றிற்கும் மேலாக உம்முடன் செலவிடும் நேரத்தை முதன்மைப்படுத்துவதன் மூலம் சிறந்ததையும், புகழப்படத்தக்கதையும் தேர்ந்தெடுக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
“பிலிப்பியர் 4:8B * நமது சிந்தனையானது, நமது மனப்பான்மையையும், உணர்ச்சிகளையும், நடத்தைகளையும் அதிகமாகப் பாதிக்கிறது.* ஒரு தோட்டக்காரன் பூக்களை கவனமாகப் பார்ப்பது போல, நாம் நம் எண்ணங்களை நல்ல முறையில் வளர்த்துக்கொள்ள வேண்டும்.* நேர்மையான உயர்ந்த எண்ணங்களில் உணர்வுபூர்வமாக கவனம் செலுத்துவதன் மூலம், ஆத்தும வளர்ச்சிக்கு உகந்த சூழலை வளர்த்துக் கொள்கிறோம். லூக்காவின் 10 ஆம் அதிகாரத்தில், இயேசு மார்த்தாள், மரியாளின் வீட்டிற்குச் செல்கிறார். மார்த்தாள் பற்பல வேலைகளில் மும்முரமாக இருந்தபோது, மரியாள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வசனத்தைக் கேட்க விரும்பினாள். மரியாள் தன் வேலைகளை புறக்கணிப்பதாகவோ அல்லது வேலையில் உதவிசெய்யாததாகவோ தோன்றினாலும், இயேசு அவள் செய்ததைப் பாராட்டி, "மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துக் கொண்டாள்" என்றார். இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்த மரியாளின் செயல், சிறந்த மற்றும் புகழப்படத்தக்க விஷயங்களில் கவனம் செலுத்தும் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. * மரியாளைப் போலவே, சிறந்த மற்றும் புகழப்படத்தக்கவற்றில் கவனம் செலுத்துவதைத் தேர்ந்தெடுப்பது உங்கள் வாழ்க்கைக்கு மிகுந்த நிறைவையும் அர்த்தத்தையும் அளிக்கும்.* இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து ஜெபத்தின் மூலமும், வசனத்தைப் படிப்பதின் மூலமும் நேரத்தை செலவிட்டு, அவருடைய ஞானத்தையும், சமாதானத்தையும், அன்பையும் பெற்றுக்கொள்ளுங்கள்.* உங்கள் இருதயத்திலும் மனதிலும் ஒரு அற்புதமான நிறைவை பெற்று அனுபவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எல்லாவற்றிற்கும் மேலாக உம்முடன் செலவிடும் நேரத்தை முதன்மைப்படுத்துவதன் மூலம் சிறந்ததையும், புகழப்படத்தக்கதையும் தேர்ந்தெடுக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

